2019 யூனில் தயாரிப்பு நடவடிக்கைகள் 53.9 சுட்டெண் பெறுமதியொன்றினைப் பதிவுசெய்து உயர்வான வீதமொன்றில் விரிவடைந்தன. இது 2019 மேயுடன் ஒப்பிடுகையில் 3.2 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்பாகும். தயாரிப்பு கொள்வனவு முகாமைத்துவச் சுட்டெண்ணின் இவ்விரிவாக்கத்திற்கு தொழில்நிலையில் விசேடமாக, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் உணரப்பட்ட குறைந்த தொழில்நிலை கிடைக்கப்பெறும் நிலையிலிருந்து உணவு மற்றும் குடிபானம் மற்றும் புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் துறையில் குறிப்பிடத்தக்க மீட்சி முக்கிய காரணமாக அமைந்திருந்தது. புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தியில் குறிப்பாக, உணவு மற்றும் குடிபானங்கள் துறை தயாரிப்பில் விரிவுபடுத்தலும் 2019 யூனில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மேம்படுவதற்கு பங்களித்திருந்தது. உயிர்த்த ஞாயிறுத் தாக்கத்தல்களினால் ஏற்பட்ட இடைத்தடங்கல்களுக்குப் பின்னர் பொருளாதார நடவடிக்கைகளின் சுமுகமடைதலுடன் புதிய கட்டளைகளும் உற்பத்தியும் யூனில் பாரியளவில் மீட்சியடைந்துள்ளன என அநேக பதிலிறுத்துநர்கள் எடுத்துக்காட்டியிருந்தனர்.
-
Sri Lanka Purchasing Managers’ Index - June 2019
-
Monetary Policy Review - No. 4 of 2019
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2019 யூலை 11ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டங்களான முறையே 7.50 சதவீதத்திலும் 8.50 சதவீதத்திலும் பேணுவதெனத் தீர்மானித்துள்ளது. சபையானது உள்நாட்டுப் பொருளாதாரத்திலும் நிதியியல் சந்தைகளிலும் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரத்திலும் தற்பொழுது காணப்படுகின்ற மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளை மிகக் கவனமாக பகுப்பாய்வு செய்தமையினைத் தொடர்ந்து இம்முடிவிற்கு வந்திருக்கிறது. நாணயச் சபையின் தீர்மானமானது பணவீக்கத்தினை விரும்பத்தக்க 4-6 சதவீத வீச்சில் பேணுவதனுடன் இசைந்து செல்வதாகக் காணப்பட்ட வேளையில் பொருளாதார வளர்ச்சி நடுத்தர காலப்பகுதியில் அதன் உள்ளார்ந்த வளர்ச்சியை அடைவதற்கு ஆதரவளிப்பதாகவும் காணப்பட்டது.
-
Extension of the Suspension of Business of Perpetual Treasuries Limited
பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குவிதிகளின் நியதிகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் 2019 யூலை 05ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு தீர்மானித்திருக்கிறது.
-
The Democratic Socialist Republic of Sri Lanka - USD 2.0 billion International Sovereign Bond Offering
இலங்கை மத்திய வங்கி, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் (இலங்கை) சார்பில் 2019 யூன் 24ஆம் நாளன்று, புதிய வழங்கல்களான 5 ஆண்டு காலப்பகுதிக்கான ஐ.அ.டொலர் 500 மில்லியனையும் நீண்ட 10 ஆண்டு காலப்பகுதிக்கான ஐ.அ.டொலர் 1.5 பில்லியனையும் கொண்ட மூத்த பிணையிடப்படாத நிலையான வீதத்தினைக் கொண்ட முறிகளை ('முறிகள்") வெற்றிகரமாக விலையிட்டதன் மூலமும் முறையே 2024 யூன் 28ஆம் நாள் மற்றும் 2030 மாச்சு 28ஆம் நாள் முதிர்ச்சிகளுடன் வழங்கியதன் மூலமும் ஐ.அ.டொலர் முறிச் சந்தைக்கு இலங்கை திரும்பியது. முறிகள், மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விஸ், ஸ்டான்டட் அன்ட் புவர் மற்றும் பிட்ஜ் றேற்றிங்ஸ் என்பனவற்றினால் முறையே 'B2’, 'B' மற்றும் 'B' இல் தரமிடப்பட்டுள்ளன.
-
Sri Lanka Launches its National Card Scheme
இலங்கை மத்திய வங்கி லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட்டுடன் இணைந்து தேசிய அட்டைத் திட்டத்தினை ஆரம்பித்ததன் மூலம் நாட்டின் கொடுப்பனவுத் தோற்றப்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல் கல்லொன்றினை அடைந்திருக்கிறது. தேசிய அட்டைத் திட்டமானது, பன்னாட்டு கொடுப்பனவு அட்டைத் தொழிற்பாட்டாளரான ஜேசிபி யப்பான் இன்ரநஷனலின் பங்கேற்புடன் லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிட்டெட்டினால் தொழிற்படுத்தப்படும். ஆரம்பத்தில், இவ்வட்டைத் திட்டத்தின் கீழ் பற்று அட்டை வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக, காசு மீள பெறுகைகளுக்கு வசதியளிப்பதற்காக, லங்காபே வலையமைப்புடன் நாடளாவிய ரீதியில் இணைக்கப்பட்டுள்ள 4,800 இற்கு மேற்பட்ட தன்னியக்கக்கூற்றுப் பொறிகளில் தேசிய அட்டைத் திட்ட அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
-
Inflation in May 2019
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)' ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 ஏப்பிறலின் 3.6 சதவீதத்திலிருந்து 2019 மேயில் 3.5 சதவீதத்திற்கு குறைவடைந்தமைக்கு முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தில் காணப்பட்ட உயர்ந்த தளமே காரணமாகும். இதேவேளையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கம் 2019 மேயில் முறையே -0.4 சதவீதம் மற்றும் 6.7 சதவீதமாக பதிவாகியது.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 ஏப்பிறலின் 1.9 சதவீதத்திலிருந்து 2019 மேயில் 2.0 சதவீதத்திற்கு சிறிதளவாக அதிகரித்தது.
-
The National Launch of the Roadmap for Sustainable Finance in Sri Lanka and a High-Level Seminar for Senior Officers of Financial Institutions and Stakeholders
இலங்கை மத்திய வங்கியானது இலங்கையின் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலொன்றினை தொடக்கி வைத்ததுடன் நிதியியல் நிறுவனங்களின் மூத்த அலுவலர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கான உயர்மட்ட ஆய்வரங்கு ஒன்றினையும் இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் 2019 யூன் 19 அன்று தொடக்கி வைத்தது. இது, ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி இலுள்ள பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தின் நீடித்துநிலைத்திருக்கக்கூடிய வங்கித்தொழில் உலகளாவிய வலையமைப்புக் கூட்டத்தில் 2019 ஏப்பிறல் 10ஆம் நாளன்று நீடித்துநிலைத்திருக்கக்கூடிய நிதிக்கான வழிகாட்டலொன்றிற்கான தேசிய வெளியீட்டுடன் தொடர்புபட்டதாகும்.
-
External Sector Performance - April 2019
சுருக்கமடைகின்றவர்த்தகப் பற்றாக்குறையினால் ஆதரவளிக்கப்பட்டு வெளிநாட்டுத் துறையானது 2019 ஏப்பிறலில் ஒப்பீட்டளவில் உறுதியானதாகக் காணப்பட்டது.
2019 ஏப்பிறலில், வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை 2018 ஏப்பிறலின் ஐ.அ.டொலர் 999 மில்லியனிலிருந்து ஐ.அ.டொலர் 797 மில்லியனுக்குசுருக்கமடைந்தது.
2019 ஏப்பிறலில் வர்த்தகப் பற்றாக்குறையில் குறிப்பிடத்தக்களவு குறைவு ஏற்பட்டமைக்கு, இறக்குமதிச் செலவினத்தில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ஏற்பட்ட 11 சதவீத வீழ்ச்சியும் ஏற்றுமதி வருவாயில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் ஏற்பட்ட 0.4 சதவீத சிறிதளவான அதிகரிப்பும் காரணமாக அமைந்தன.
-
Sri Lanka Purchasing Managers’ Index - May 2019
2019 மேயில் தயாரிப்பு நடவடிக்கைகள் 50.7 சதவீதம் கொண்ட சுட்டெண் பெறுமதிக்கு மீட்சியடைந்தன. இது 2019 ஏப்பிறலுடன் ஒப்பிடுகையில் 9.7 சுட்டெண் புள்ளிகளைக் கொண்டதொரு அதிகரிப்பாகும். தயாரிப்பு கொள்வனவு முகாமைத்துவச் சுட்டெண்ணின் மீட்சிக்கு தயாரிப்பு மற்றும் புதிய கட்டளைகளில், குறிப்பாக, புடவைகளின் தயாரிப்பு, அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் தொடர்பான உற்பத்திகள் என்பனவற்றின் உற்பத்திகளிலும் புதிய கட்டளைகளிலும் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்புக்களே முக்கிய காரணமாகும். உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு, தொழிற்சாலைத் தொழிற்பாடுகளில் மேலதிக நேரங்களைப் பயன்படுத்தி குவிந்திருந்த கட்டளைகள் பூர்த்தி செய்யப்பட்டமையே காரணமாகும். குறிப்பாக, புடவை மற்றும் ஆடைகள் துறையிலுள்ள அநேக பதிலிறுப்பாளர்கள் இம்மாத காலப்பகுதியில் நிலுவையிலிருந்த கட்டளைகளை தீர்ப்பனவு செய்வதற்காக தாம் வார நாட்களிலும் அதேபோன்று வார இறுதியிலும் மேலதிக மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டியிருந்தது என்பதனை எடுத்துக்காட்டியிருக்கிறார்கள்.
-
Central Bank of Sri Lanka Receives Presidential Award for Digital Excellence
2019 யூன் 11ஆம் நாளன்று தாமரைத் தடாகத் திரையரங்கில் நடைபெற்ற சனாதிபதி விருது வழங்கும் நிகழ்வில் மேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் விசேடத்துவம் மிக்க டிஜிட்டலுக்கான சனாதிபதி விருது இலங்கை மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டது. நாட்டில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு வழியமைத்துக் கொடுத்த மாபெரும் பணியினை அங்கீகரிக்கும் விதத்தில் இலங்கை மத்திய வங்கிக்கு இது வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்வு இலங்கை ரெலிகொம் பிஎல்சி இனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.