பல ஊடக அறிக்கைகள் பற்றி மத்திய வங்கியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன் இதில் குறிப்பிட்ட சில பேரண்டப் பொருளாதார எறிவுகள் இலங்கை மத்திய வங்கியுடன் தொடர்பானவை எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கி, 2020 ஏப்பிறலில், இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையினை வெளியிட்டதன் பின்னர் அதன் பேரண்டப் பொருளாதார எறிவுகளுக்கு எந்தவித இற்றைப்படுத்தல்களையும் பொதுமக்களுக்கு வெளியிடவில்லை. கொவிட்-19 தொற்றினால் உருவான நிச்சயமற்ற நிலைமைகளைக் கவனத்தில் கொள்கையில் பேரண்டப் பொருளாதார எறிவுகளுக்கான இற்றைப்படுத்தல்கள் அடிக்கடி தேவைப்படுகின்றதுடன் இலங்கை மத்திய வங்கி, பொருளாதார நடவடிக்கைகளின் நியமக் குறிகாட்டிகள் கிடைக்கப்பெற்றதும் அவற்றைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகிறது. இது அதன் பகுப்பாய்வுகளிலும் கொள்கை வழிகாட்டல்களிலும் மரபுவழியற்ற குறிகாட்டிகளையும் அதேநேர அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றது.