நாணயச் சபை, மாண்புமிகு நிதியமைச்சரின் இணக்கத்துடன் உதவி ஆளுநர் திரு சி ஜே பி சிறிவர்த்தன அவர்களை 2017 ஓகத்து 19ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக பதவி உயர்த்தியிருக்கிறது.
திரு. சி ஜே பி சிறிவர்த்தன
நாணயச் சபை, மாண்புமிகு நிதியமைச்சரின் இணக்கத்துடன் உதவி ஆளுநர் திரு சி ஜே பி சிறிவர்த்தன அவர்களை 2017 ஓகத்து 19ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக பதவி உயர்த்தியிருக்கிறது.
திரு. சி ஜே பி சிறிவர்த்தன
தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைகக் ளத்தினால் தொகுக்கப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 2017 யூலையிலும் முன்னைய மாதத்தில் காணப்பட்ட அதே மட்டமான 6.3 சதவீதத்தில் மாறாது விளங்கியது. 2017 யூலையின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கத்துக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாக பங்களித்தன.
ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 யூனின் 6.1 சதவீதத்திலிருந்து 2017 யூலையின் 6.2 சதவீதத்துக்கு சிறிதளவால் அதிகரித்தது.
தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் யூலை மாதத்தில் 54.3 சுட்டெண் புள்ளிகளை பதிவு செய்ததுடன் இது 2017 யூன் மாதத்துடன் ஒப்பிடும் போது 1.8 சுட்டெண் புள்ளிகளை கொண்ட ஒரு குறைவாகும். இது தயாரிப்பு நடவடிக்கைகள் 2017 யூன் மாதத்தில் ஒரு குறைவான வேகத்தில் விரிவடைந்தமையினை குறித்து காட்டுவதுடன், இது பிரதானமாக முன்னைய மாதத்தில் சேர்க்கப்பட்ட மேலதிக இருப்புகளின் பாவனைகளிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட கொள்வனவுகளின் இருப்பு துணைச்சுட்டெண்ணில் ஏற்பட்ட குறைவினாலும் அதிகளவான தொழிலாளர் சுழற்சிவீதத்தினை கணக்கில் கொள்ளும் போது திறனற்ற தொழிலாளர்களின் மாற்றீடுகளில் காணப்பட்ட சிக்கல் தன்மையின் காரணமாக தொழிலாளர் துணைச்சுட்டெண்ணில் ஏற்பட்ட குறைவினாலும் உந்தப்பட்டது. மாதகாலப்பகுதியில் புதிய கடட் ளைகள் மற்றும் நிரம்பலர் வழங்கல் நேர துணைச்சுட்டெண்கள் மெதுவடைந்து காணப்பட்ட வேளையில், உற்பத்தி துணைச்சுட்டெண் அதே அளவில் காணப்பட்டது.
'டோடல் பே மற்றும் ஐசிரிஏ" தொடர்பில் சுற்றோட்டத்தில் விடப்பட்ட செய்திக் கடடு;ரைகளுக்கு பதிலிறுத்தும் விதத்தில், தேசிய கொடுப்பனவுத் தளம் மறுசீரமைப்பது தொடர்பிலான தற்போதைய நிலைமைகளின் முழுமையான விளக்கத்தினை வழங்கும் நோக்குடன் நிகழ்வுகளின் உண்மைத் தன்மையினை வழங்குவதற்கும் பொதுமக்களை தெளிவுபடுத்தவதற்கு இலங்கை மத்திய வங்கி விரும்புகின்றது.
பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கடட்ளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கடட் ளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, 2017 ஓகத்து 14ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2017 ஓகத்து 15ஆம் திகதி மு.ப. 10.00 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பான் ஏசியா பாங்கிங் கேப்பிரசேன் பிஎல்சி முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து ஆறு மாத காலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது.
அண்மைய வெள்ளம், மோசமான வானிலை நிலைமைகள் மற்றும் அதனுடன் இணைந்த சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்கள் அவர்களின் வியாபாரங்களை மீளத்தொடங்குவதையும் அவர்களின் வழமையான நடவடிக்கைகளுக்குத் திரும்புவதையும் வசதிப்படுத்தும் நோக்குடன், உரிமம் பெற்ற வங்கிகள் அவற்றின் அத்தகைய பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதித்துள்ளது.
இதன்படி, உரிமம் பெற்ற வங்கிகள்;
இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு, பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கெதிரான புலனாய்வுகளையும் வழங்குகள் தொடர்வதற்கான நடவடிக்கைளையும் வசதிப்படுத்தி நிதியியல் தகவல்களைப் பகிர்நதுகொள்ளும் பொருட்டு 2017 யூலை 17 - 21 காலப்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற பணம் தூயதாக்கல் மீதான ஆசிய பசுபிக் குழுமத்தின் 20 ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பூட்டான் இராச்சியத்தின் நிதியியல் உளவறிதல் பிரிவு மற்றும் சனீhவின் பணம் தூயதாகக்லைத் தடுப்பதற்கான கணக்hணிப்பு மற்றும் பகுப்பாய்வு நிலையம் போன்றவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறது.
The Monetary Board, at its meeting held on 02 August 2017, was of the view that the current monetary policy stance is appropriate and decided to maintain the policy interest rates of the Central Bank of Sri Lanka at their present levels.
In arriving at the above decision, the Monetary Board took into consideration current and expected developments in the domestic and international macroeconomic environment and the need to maintain inflation at mid-single digit levels over the medium term.
இலங்கை, பணம் தூயதாக்கல் மீதான ஆசிய/ பசுபிக் குழுமத்தின் 20 ஆவது ஆண்டுக் கூட்டத்தினை ஆசிய பசுபிக் குழுமத்தின் 41 உறுப்பு நாடுகளிலிருந்தான 408 பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு பன்னாட்டு அவதானிப்பாளர் நிறுவனங்களிலிருந்தான 24 அவதானிப்பாளர்கள் ஆகியோரின் பங்குபறற் லுடன் 2017 யூலை 15 - 21 வரை கொழும்பில் நடாத்தியிருந்தது. இந்த நிகழ்விற்கு அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
நாட்டிற்கான 11ஆவது பன்னாட்டு முறி வழங்கல்களிலிருந்தான வருவாய்கள் மற்றும் 2017 மேயில் கிடைக்கப்பெற்ற குழுநிலைக் கடன் வசதி போன்றவற்றின் மூலம் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கான குறிப்பிடத்தக்க உட்பாய்ச்சல்களால் இலங்கையின் வெளிநாட்டுத் துறை வலுவடைந்தது. இவ் உட்பாய்ச்சல்கள், 2017 ஏப்பிறல் இறுதியில் ஐ.அ.டொலர் 5.0 பில்லியனாகக் காணப்பட்ட மொத்த அலுவல்சார் ஒதுக்குகளினை 2017 ஏப்பிறல் இறுதியில் ஐ.அ.டொலர் 6.8 பில்லியனானதொரு அதிகரிப்பினை தோற்றுவித்தது. இலங்கை பொருளாதாரத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையானது அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை போன்றவற்றின் தொடர்ச்சியான உட்பாய்ச்சல்கள் மூலம் தொடர்ந்தும் மிதப்பாகக் காணப்பட்டது.