அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அரசாங்க படுகடன் பிணையங்கள்

அரசாங்க படுகடன் பிணையங்கள் என்றால் என்ன?

அரசாங்க பிணையம் என்பது முதிர்ச்சியின் மீது மீள் கொடுப்பனவு வாக்குறுதியொன்றுடன் கூடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் படுகடன் சாதனமொன்றாகும். திறைசேரி முறிகள், இலங்கை அபிவிருத்தி முறிகள், நாட்டுக்கான பன்னாட்டு முறிகள் போன்ற அரசாங்க பிணையங்கள் முதிர்ச்சியில் கால முறையான நறுக்குகள் அல்லது வட்டிக் கொடுப்பனவுகள் மற்றும் முதன்மைத் தொகை ஆகியவற்றுக்கு வாக்குறுதி அளிக்கின்றன. திறைசேரி உண்டியல்கள் என்பது கழிவொன்றில் வழங்கப்பட்டு முதிர்ச்சியில் முதன்மைத் தொகையினைக் கொடுப்பனவு செய்வதாகும். இலங்கையில் இலங்கை மத்திய வங்கியின் பொதுப்படுகடன் திணைக்களம் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் திறைசேரி உண்டியல்களையும் திறைசேரி முறிகளையும் இலங்கை அபிவிருத்தி முறிகளையும் வழங்குவதுடன் முதிர்வில் முதிர்வுப் பெறுகைகளை மீள்கொடுப்பனவு செய்கின்றது. இப்பிணையங்களுக்;கு இலங்கை அரசாங்கத்தினால் துணையளிக்கப்படுவதனால் இவை தவணை தவறுதல் இடர்நேர்வற்ற சாதனங்களாக கருதப்படுகின்றன;

முதலீட்டாளர்களுக்காகக் கிடைக்கப்பெறுகின்ற இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் உள்நாட்டு படுகடன் பிணையங்கள் யாவை?

மூன்று வகையான உள்நாட்டு படுகடன் பிணையங்கள் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றன. அவையாவன:

  1. திறைசேரி உண்டியல்கள்
  2. திறைசேரி முறிகள்
  3. இலங்கை அபிவிருத்தி முறிகள்

உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கான இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் சந்தைப்படுத்தத்தக்க படுகடன் சாதனங்கள் யாவை?

திறைசேரி உண்டியல்களும் திறைசேரி முறிகளும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்காகக் கிடைக்கப்பெறுகின்ற சந்தைப்படுத்தத்தக்க படுகடன் சாதனங்களாகும்.

திறைசேரி உண்டியல் என்றால் என்ன?

திறைசேரி உண்டியல் என்பது வரவுசெலவுத் திட்ட நோக்கங்களுக்காக இலங்கை அரசாங்கம் உள்நாட்டுப் பொதுப் படுகடனை திரட்டுகின்றபோது 1923இன் 8ஆம் இலக்க உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்டவாறான) கீழ் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் குறுங்கால படுகடன் சாதனமொன்றாகும். 

திறைசேரி முறி என்றால் என்ன?

திறைசேரி முறி என்பது வரவுசெலவுத் திட்ட நோக்கங்களுக்காக இலங்கை அரசாங்கம் உள்நாட்டுப் பொதுப் படுகடனை திரட்டுகின்றபோது 1937இன் 7ஆம் இலக்க பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்டவாறான) கீழ் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் நடுத்தரகால மற்றும் நீண்டகால படுகடன் சாதனமொன்றாகும். 

திறைசேரி உண்டியல் மற்றும் முறிகளின் பிரதான பண்புகள் யாது?

அ) தவணை தவறுதல் இடர்நேர்வற்றவை, நிறைகாப்புடை படுகடன் சாதனம்

ஆ) திறைசேரி உண்டியலானது குறுகிய கால பூச்சிய நறுக்கு படுகடன் சாதனமொன்றாவதுடன் திறைசேரி முறி நடுத்தர காலம் தொடக்கம் நீண்;ட காலம் வரையான படுகடன் சாதனமொன்றாகும்.

இ) திறைசேரி உண்டியல்களுக்காக முதிர்ச்சி பெறுகைகள் (முகப் பெறுமதி) முதிர்வில் கொடுப்பனவு செய்யப்படும். திறைசேரி முறிகள் அரையாண்டு நறுக்குக் கொடுப்பனவுகளைக் கொண்டதுடன் முதன்மைத் தொகை முதிர்வில் மீள்கொடுப்பனவு செய்யப்படுகின்றது.

ஈ) விளைவு வீதங்கள் சந்தை மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன

உ) இரண்டாம் தரச் சந்தையில் வர்த்தகப்படுத்தக்கூடிய சாதனங்களாகும்

ஊ) பத்திரங்களற்ற வடிவில் வழங்கப்படுகின்றது

வெளிநாட்டு முதலீட்டாளரொருவராக திறைசேரி உண்டியல் மற்றும் முறிகளில் நான் முதலீடு செய்ய முடியுமா?

ஆம், நீங்கள் பின்வரும் வகைகளில் உள்ள ஒருவராயின்;

எ) நாட்டு நிதியங்கள், பரஸ்பர நிதியங்கள் அல்லது பிராந்திய நிதியங்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டு நிறுவனசார் முதலீட்டாளர்கள்.

ஏ) இலங்கைக்கு வெளியில் கூட்டிணைக்கப்பட்ட கூட்டு நிறுவனங்கள்;

ஐ) இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் வதிகின்ற வெளிநாடுகளின் பிரசைகள்.

ஒ) இலங்கையில் வதியாத இலங்கையர்கள்.

திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளில் முதலீடு செய்வதன் மூலம் எவ்வாறான நன்மைகளை நான் பெற முடியும்?

அ) இறைமைமிக்க அரசாங்கத்தினால்  அது வழங்கப்படுவதனால்  எவ்வித இடர்நேர்வுமற்ற முதலீடாகும். இதனால் அவை, நிறைகாப்புடைய பிணையங்கள் என அழைக்கப்படுகின்றன. இதன் அர்த்தம், தங்கத்தின் மூலம் அவை காப்பளிக்கப்பட்டுள்ளன என்பதாகும்.

ஆ) விளைவு வீதங்கள் சந்தையில் நிர்ணயிக்கப்படுகின்றமையினால் உயர் வட்டி வீதங்களை நீங்கள் பெறலாம்.

இ) இவ் உண்டியல்கள் இரண்டாந் தரச் சந்தையில் வர்த்தகப்படுத்தத்தக்கவை என்பதனால் சந்தையில் அவற்றை விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் உடனடித் திரவத்தன்மையினைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஈ) முதிர்ச்சிப் பெறுகைகளின் அனைத்து வரும்படிகளும் மூலதன ஆதாயங்களும் முழுமையாக சொந்த நாட்டுக்கு அனுப்பக் கூடியவை.

உ) வேறு ஆளுடன் அல்லது ஆட்களுடன் இணைந்த முதலீடொன்றினை நீங்கள் மேற்கொள்ளவும் முடியும். எனவே, நீங்கள் விரும்புகின்ற ஆட்களுடன் உங்களது முதலீடுகளை பகிர்ந்துகொள்வதற்கு இது மிகச் சிறந்த வழியொன்றாகும்.

ஊ) அதன் அதிநவீன, பத்திரங்களற்ற பிணையத் தீர்ப்பனவு முறைமை மற்றும் முழுமையான தன்னியக்கமான மத்திய வைப்பக முறைமையில் உங்களது முதலீட்டினைப் பேணுகின்ற இலங்கை மத்திய வங்கியிடமிருந்து மிகச் சிறந்த சேவையினை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்).

திறைசேரி உண்டியல்/ முறிகளை கொள்வனவு செய்வதற்கும்ஃ விற்பனை செய்வதற்கு மற்றும் பெறுகைகளை சேகரிப்பதற்கும் பின்பற்ற வேண்டிய நடைமுறை யாது?

திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகளின் கொள்வனவு மற்றும் விற்பனை தொடர்பாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வதியாத இலங்கையர்களுக்கான 08/24/031/0018/001ஆம் இலக்க 2013 ஏப்பிறல் 10ஆம் திகதியிடப்பட்ட இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல் மற்றும் நடைமுறைகளை தயவுசெய்து பார்க்க.

இலங்கை அபிவிருத்தி முறிகள் என்றால் என்ன?

இலங்கை அபிவிருத்தி முறிகள் என்பது 1957இன் 29ஆம் இலக்க வெளிநாட்டுக் கடன்கள் சட்டத்தின் நியதிகளுக்கமைய இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற ஐ.அ.டொலர்களில் மாற்றப்பட்ட படுகடன் சாதனங்களாகும். மீள்கொடுப்பனவு இலங்கை அரசாங்கத்தினால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அபிவிருத்தி முறிகளின் முக்கிய பண்புகள் யாவை?

அ) வருடத்திற்கு இருமுறை வட்டிக் கொடுப்பனவுகள்

ஆ) குறைந்தபட்ச முதலீடு ஐ.அ.டொலர் 10,000 மற்றும் ஐ.அ.டொலர் 10,000இன் பெருக்கங்கள்

இ) முதலீட்டு நாணயம் ஐ.அ.டொலர்

ஈ) நிலையான மற்றும் நெகிழ்வுமிக்க (ஆறு மாத லண்டன் வங்கிகளுக்கிடையிலான  முன்வைக்கப்பட்ட வங்கி வீதங்கள் அல்லது அதனைத் தொடர்ந்து வருகின்ற வீதங்களுடன் சேர்த்து) வட்டி வீதங்கள்ஃ நறுக்கு வீதங்களில் கிடைக்கப்பெறுகின்றது.

உ) போட்டி விலைக்குறிப்பீடு ஊடாக வழங்கப்படும்.

ஊ) பத்திரங்கள் வடிவில் வழங்கப்படும்

அரசாங்கப் பிணையங்கள் தொடர்பான தகவல்களை நான் எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம்?

அ) அரசாங்க பிணையங்கள் பற்றி கிடைக்கப்பெறுகின்ற விபரங்களையும் நிலவுகின்ற சந்தை வீதங்களையும் உரிமம்பெற்ற வணிக வங்கிகள், முதனிலை வணிகர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் வெப்தளம் என்பவற்றிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

ஆ) நடப்பு ஏலங்கள் பற்றிய விபரங்களை உரிமம்பெற்ற வணிக வங்கிகள் மற்றும் முதனிலை வணிகர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

இ) அரசாங்க பிணையங்கள் பற்றிய ஏதேனும் விபரத்தினை இலங்கை மத்திய வங்கியின் பொதுப் படுகடன் திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் படுகடன் பிணையங்கள் தொடர்பான சந்தை விபரங்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது?

சந்தை விபரங்களை செய்திப் பத்திரிகைகளிலிருந்தும் இவ்வெப்பதளத்திலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

பத்திரங்களற்ற அரசாங்க பிணையங்கள் என்றால் என்ன?

பத்திரங்களற்ற அரசாங்க பிணையங்கள் என்பது கடதாசிச் சான்றிதழின்றி தரவுப் பதிவு வடிவில் வழங்கப்படுபவையாகும்.

லங்கா செய்குயர் என்றால் என்ன?

லங்கை செய்குயர் முறைமையென்பது நாணய விதிச் சட்டத்தின் நியதிகளுக்கமைய நிறுவப்பட்ட பத்திரங்கலற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமை மற்றும் மத்திய வைப்பக முறைமையென பொருளாகும். இது பத்திரங்கலற்ற பிணையங்களின் முதனிலை வழங்கல் தீர்ப்பனவு மற்றும் பதிவுசெய்தல் மற்றும் இரண்டாந்தரச் சந்தைக் கொடுக்கல்வாங்கல் பதிவினை மேற்கொள்ளுதல் என்பவற்றை வசதிப்படுத்துகின்றது.

பத்திரங்கலற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமையென்றால் என்ன?

பத்திரங்கலற்ற பிணையங்கள் கொடுக்கல்வாங்கல்கள், பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்;ப்பனவு முறைமையென அறியப்படுகின்ற இலத்திரனியல் தீர்ப்பனவு ஒழுக்கேற்பாடொன்றினூடாக தீர்ப்பனவு செய்யப்படும். பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமையில் பிணையங்களின் தீர்ப்பனவானது கொடுக்கல்வாங்கல்கள் இடம்பெறுகின்ற சமகாலத்தின் போது இடம்பெறும். கொடுக்கல்வாங்கலொன்று இடம்பெறும்போதெல்லாம் இலத்திரனியல் தரவுப்பதிவொன்றின் வடிவத்தில் ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பிணையங்கள் மாற்றல் செய்யப்படும். 

மத்திய வைப்பக முறைமை என்றால் என்ன?

மத்திய வைப்பக முறைமை என்பது அரசாங்க பிணையங்களின் உரித்துப் பதிவுகளைப் பேணுகின்ற தரவுத் தளத்தின் அடிப்படையில் அமைந்த கணனியொன்றாகும். மத்திய வைப்பக முறைமையானது முறைமைப் பங்கேற்பாளர்களது கணக்குகளையும் ஒவ்வொரு பிணையங்களின் தனியுரிமையாளரினதும் தனிப்பட்ட கணக்குகளையும் பேணுகின்றது. பத்திரங்களற்ற பிணையங்களின் உரித்துகளின் மாற்றலானது பங்கேற்பாளர்களிடமிருந்து அதாவது, முதனிலை வணிகர்கள், உரிமம்பெற்ற வணிக வங்கிகள் மற்றும் நாணயச் சபையினால் அனுமதிக்கப்பட்ட ஏதேனும் வேறு நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப் பெறும் அறிவுறுத்தல்களுக்கமைவாக மத்திய வைப்பக முறைமையில் இலத்திரனியல் ரீதியாக பதிவு செய்யப்படுகின்றது. 

முதலீட்டாளர்களுக்கு லங்கா செக்குயர் உடனான தொடர்பு யாது?

அரசாங்க பிணையங்களிலுள்ள முதலீட்டாளர்கள் வணிகர் நேரடி பங்கேற்பாளர்கள் அதாவது முதனிலை வணிகர்கள் மற்றும் உரிமம்பெற்ற வணிக வங்கிகள் என்பன ஊடாக லங்கா செக்குயர் இல் கணக்குகளை ஆரம்பித்து பேண முடியும். முதலீட்டாளர்களுடன் தொடர்புடைய அனைத்துக் கொடுக்கல்வாங்கல்களும் அவர்களது முதனிலை வணிகர்கள் மற்றும் உரிமம்பெற்ற வணிக வங்கிக;டாக முதலீட்டாளர் கணக்குகளில் பதிவுசெய்யப்படும்.

அரசாங்க பிணையங்களில் நான் முதலிட்டிருப்பின் கூற்றுகள் லங்கா செக்குயர் மூலம் எனக்கு கிடைக்குமா?

கணக்கு வைத்திருக்கும் ஒருவருக்கும் பின்வரும் தகவல்களை உள்ளடக்குகின்ற கூற்றுகளை லங்கா செக்குயர் வழங்கும்.

அ) மாதத்தின் போது இடம்பெற்ற கொடுக்கல்வாங்கல்களை உறுதிப்படுத்துகின்ற மாதாந்த கூற்று. கொடுக்கல்வாங்கல்கள் எதுவும் மாதத்தின் போது இடம்பெற்றிருக்காவிடின்; முறைமை கூற்று எதனையும் உருவாக்காது.

ஆ) ஒவ்வொரு முதலீட்டாளரினாலும் வைத்திருக்கப்படும் நிலுவையாகவுள்ள மீதியினை உறுதிப்படுத்துகின்ற வருடத்திற்கு இரண்டு கூற்று 

இ) முதலீட்டாளருக்கு பணக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் முதிர்வுப் பெறுகைகள் அத்துடன்/ அல்லது நறுக்குக் கொடுப்பனவுகளை குறித்துக் காட்டுகின்ற கூற்று

இக்கூற்றுக்கள் லங்கா செக்குயர் இன் மத்திய வைப்பக முறைமையில் பதிவுசெய்யப்பட்டுள்ள முதலீட்டாளரின் பெயர் மற்றும் முகவரிக்கு நேரடியாக வழங்கப்படும்.

எனது லங்கா செக்குயர் கணக்குகளை இணையத்தளம் ஊடாக எனக்குப் பார்க்க முடியுமா?

இணையத்தளமூடாக எந்நேரத்திலும் தமது முதலீடுகள் பற்றிய தகவல்கள் தொடர்பான விபரங்களைப் பார்ப்பதற்கு அரசாங்க பிணையக் கணக்கு வைத்திருப்போரை இயலச் செய்கின்ற லங்கா செக்குயர்நெட் என அழைக்கப்படுகின்ற முறைமையொன்றினை இலங்கை மத்திய வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.

லங்கா செக்குயர்நெட் என்பது யாது?

லங்காசெக்குயர்நெட் என்பது அரசாங்க பிணையங்களின் முதலீட்டாளர்கள் தமது கொடுக்கல்வாங்கல்கள், வட்டி, மற்றும் முதிர்வுக் கொடுப்பனவுகள் அத்துடன் நிலுவையாக உள்ள மீதிகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு இயலுமாகவிருக்கின்ற இணையத்தள அடிப்படையிலான வசதியொன்றாகும். இவ்வசதியானது, முதலீடுகள் தொடர்பில் நடப்புத் தகல்வல்களையும் வரலாற்று ரீதியான தகவல்களையும் வழங்குகின்றது. ஐந்து கலண்டர் நாட்களுக்காக மாத்திரம் வரலாற்றுத் தகவல்களை அவர்களுக்கு வழங்குவதற்கான உலாவி பணி நிலையம் கிடைக்கப்பெறுகின்றமையினால் லங்கா செட்டில் இன் பங்கேற்பாளர்களும் இவ் வசதியிலிருந்து நன்மை பெறலாம். 

லங்கா செக்குயர்நெட் வசதியினை நான் எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும்?

இணையத்தளம் ஊடாக இவ்வசதியினைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்ற முதலீட்டாளரொருவர் லங்கா செக்குயர் வாடிக்கையாளர் தகவல் முறைமை இணையத்தளத்தில் தரப்பட்டுள்ள பின்வரும் படிமுறைகள் மூலம் முறைமைப் பெறு வழியினை அடையலாம் (https://www.cbsl.lk/lankasec/).