சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி – எஞ்சியுள்ள வைப்புக்களின் 50 சதவீத மீள்கொடுப்பனவு

2021 சனவரி 12ஆம் திகதியிடப்பட்ட எமது ஊடக அறிக்கை மூலம் தொடர்பூட்டப்பட்டவாறு, நாணயச் சபையினால் நியமிக்கப்பட்ட முகாமைத்துவக் குழாத்தின் மேற்பார்வையின் கீழ் கம்பனியின் எஞ்சியுள்ள வைப்புக்களின் 50 சதவீதம் (50%) வரையான மீள்கொடுப்பனவுக்கான (மீள்கொடுப்பனவுத் திட்டம்) நோக்கத்திற்காக மாத்திரம் நிபந்தனையுடனான அடிப்படையொன்றில் மட்டுப்படுத்தப்பட்ட காலமொன்றிற்கு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வியாபாரத்தினை மீள ஆரம்பிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் வழங்கப்பட்ட கட்டளையினைத் தொடர்ந்து, சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி அத்தகைய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துள்ளது. அதற்கமைய, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட 30 சதவீத மீள்கொடுப்பனவு மற்றும் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் கீழ் தகைமையுடைய நட்டஈடு என்பவற்றைக் கழித்ததன் பின்னர் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வைப்புகளின் எஞ்சியுள்ள பெறுமதியின் 50 சதவீதம் 2021 பெப்புருவரி 03ஆம் திகதியிலிருந்து ஆரம்பித்து மீள்கொடுப்பனவு செய்யப்படவுள்ளது.

முழு வடிவம்

Published Date: 

Monday, February 1, 2021