2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நேஷன் லங்கா பினான்ஸ் பிஎல்சியிற்கு நியமிக்கப்பட்ட நிருவாகத்தத்துவக்காரரான திரு. பி டபிள்யு டி என் ஆர் ரொட்ரிகோ என்பவரின் பதவிக்காலத்தை இலங்கை மத்திய வங்கி நீடித்துள்ளது.
2025.07.04ஆம் திகதியிட்ட 2443/57ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் விடுக்கப்பட்ட கட்டளையின் ஊடாக முதலில் நியமிக்கப்பட்ட திரு. ரொட்ரிகோ 2026.01.04ஆம் திகதியிலிருந்து 2026.07.03ஆம் திகதி வரையான மேலும் ஆறு (06) மாத காலப்பகுதியொன்றிற்கு இப்பொறுப்பைத் தொடர்ந்து முன்னெடுப்பார்.
Published Date:
Sunday, January 4, 2026








