நாணயச் சபையானது மாண்புமிகு நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரின் உடன்பாட்டுடன் உதவி ஆளுநராக திரு. கே. எம். மகிந்த சிறிவர்த்தன அவர்களை 2020 பெப்புருவரி 12ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராக நியமித்திருக்கிறது.
திரு சிறிவர்த்தன இலங்கை மத்திய வங்கியில் 28 ஆண்டுகளுக்கும் கூடுதலாகப் பணியாற்றி வருகிறார். அண்மையில் துணை ஆளுநராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர் திரு. சிறிவர்த்தன பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் என்பனவற்றிற்குப் பொறுப்பான உதவி ஆளுநர் பதவியை வகித்திருக்கிறார். இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.