உள்நாட்டு மற்றும் பன்னாட்டுப் பேரண்டப் பொருளாதாரச் சூழலின் அண்மைக் கால அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு நாணயச் சபை 2018 பெப்புருவரி 14இல் நடத்தப்பட்ட அதன் கூட்டத்தில் தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பொருத்தமானதெனவும் இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்களை அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதெனவும் தீர்மானித்தது.
நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்க மட்டங்களில் பேணுதல் மற்றும் அதன் மூலம் நிலைத்துநிற்கும் வளர்ச்சிப் பாதையொன்றிற்கு வசதிப்படுத்துதல் போன்ற குறிக்கோளுடன் இசைந்துசெல்லும் வகையில் நாணயச் சபையின் தீர்மானம் அமைந்துள்ளது. நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு பக்கபலமாக அமைந்த நியாயங்கள் கீழே தரப்படுகின்றன.