இலங்கை மத்திய வங்கி, சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளத்தினை அடிப்படையாகக் கொண்ட பிரயோகங்க;டாக பல்வேறு வகையான நிதியியல் மோசடிகளும் ஏமாற்று வேலைகளும் தொழிற்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பான தகவல்களைப் பெற்றிருக்கிறது. அண்மைக் காலமாக இவ்வகையிலான ஏமாற்று நடவடிக்கைகள் அதிகரித்து வருவது அவதானிக்கப்பட்டிருக்கிறது.
-
Beware of Online Scams - Protect Your Bank Passwords and PINs
-
The Central Bank Expresses its Strong Objection to the Contents of the Statement Released by Fitch Ratings
சனாதிபதி தேர்தலின் பெறுபேறுகள், அதனைத் தொடர்ந்து மேதகு சனாதிபதி கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டமை மற்றும் தற்பொழுது இடம்பெற்று வருகின்ற முக்கிய நியமனங்கள் என்பனவற்றிற்கான சாதகமான சந்தைப் பதிலிறுப்புக்களுக்கு முற்றுமுழுதாக மாறான தன்மையினை எடுத்துக்காட்டும் விதத்தில் “இலங்கையின் தேர்தல் பெறுபேறு கொள்கையின் நிச்சயமற்ற தன்மையினை அதிகரிக்கிறது” என்ற மகுடத்தின் கீழ் 2019 நவெம்பர் 21ஆம் திகதி பிட்ஜ் ரேட்டிங்கினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு மத்திய வங்கி அதன் வலுவான ஆட்சேபனையினைத் தெரிவித்துக்கொள்கிறது.
-
External Sector Performance - September 2019
ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட வீழ்ச்சி இறக்குமதிகள் மீதான செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை விஞ்சிக் காணப்பட்டமையின் காரணமாக 2019 செத்தெம்பரில் வர்த்தகப் பற்றாக்குறை (ஆண்டிற்கு ஆண்டு) விரிவடைந்தது. இருப்பினும் கூட, ஏற்றுமதிகளிலிருந்தான ஒன்றுசேர்ந்த வருவாய்கள் அதிகரித்து இறக்குமதிகள் மீதான ஒன்றுசேர்ந்த செலவினம் கடுமையாக வீழ்ச்சியடைந்தமையின் விளைவாக 2019இன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை, முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியினை விட குறிப்பிடத்தக்களவிற்குக் குறைவாகவே காணப்பட்டது. அதேவேளை, சுற்றுலா வருகைகளில் ஏற்பட்ட வீழ்ச்சி 2019 செத்தெம்பரில் மேலும் கட்டுப்படுத்தப்பட்டது. 2019 செத்தெம்பரில் தொழிலாளர் பணவனுப்பல்கள் (ஆண்டிற்கு ஆண்டு) உயர்வடைந்த போதும் ஒன்றுசேர்ந்த அடிப்படையில் அது வீழ்ச்சியடைந்தது. நிதியியல் கணக்கில், 2019 செத்தெம்பரில் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையிலும் அரச பிணையங்கள் சந்தையிலும் வெளிநாட்டு முதலீடு தேறிய வெளிப்பாய்ச்சலைப் பதிவுசெய்தது. செத்தெம்பர் மாத காலப்பகுதியில் சில பெறுமானத் தேய்வு அழுத்தங்கள் காணப்பட்ட போதும் ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் பெரும்பாலான முக்கிய நாணயங்களுக்கெதிராக இலங்கை ரூபா தொடர்ந்தும் உயர்வடைந்து காணப்பட்டது.
-
Sri Lanka Purchasing Managers’ Index - October 2019
2019 ஒத்தோபரில் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 57.6 சுட்டெண் பெறுமதிக்கு அதிகரித்தமைக்கு 2019 செத்தெம்பருடன் ஒப்பிடுகையில் உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகளில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும்.
உற்பத்தி மற்றும் புதிய கட்டளைகளில் அதிகரிப்பு, முக்கியமாக எதிர்வரும் பண்டிகைக் காலக் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்காக உணவு மற்றும் குடிபானத் துறையின் தயாரிப்பில் அவதானிக்கப்பட்டது. அதேவேளை, தொழில்நிலையும் உணவு மற்றும் குடிபானங்களின் தயாரிப்பு மற்றும் அணியும் ஆடைகள் துறைகளில் அதிகரித்தது. இதற்கு எதிர்வரும் காலத்தில் ஏற்படக்கூடிய உயர்ந்த கேள்வியை ஈடுசெய்வதற்காக உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு புதிய ஊழியர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டமையே முக்கிய காரணமாகும்.
-
Sri Lanka Prosperity Index - 2018
அனைத்து மாகாண சுபீட்சச் சுட்டெண்களிலும் ஏற்பட்ட முன்னேற்றங்களின் காரணமாக 2018இல் இலங்கை சுபீட்சச் சுட்டெண் அதிகரித்துள்ளது.
தேசிய சுபீட்சம்
2018இல் இலங்கை சுபீட்சச் சுட்டெண் 2017இல் பதிவுசெய்யப்பட்ட 0.548 இலிருந்து 0.783 இற்கு அதிகரித்துள்ளது. இலங்கை சுபீட்சச் சுட்டெண்ணின் அனைத்து மூன்று துணைச் சுட்டெண்களுமான பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல், மக்கள் நலனோம்புகை, மற்றும் சமூக பொருளாதார உட்கட்டமைப்பு என்பன இவ்வதிகரிப்பிற்குப் பங்களித்துள்ளன.
பொருளாதார மற்றும் வியாபாரச் சூழல் துணைச் சுட்டெண் மேம்பட்டமைக்கு 2018ஆம் ஆண்டுப்பகுதியில் காணப்பட்ட விலை உறுதிப்பாடும் முறைசாராத் துறையின் கூலிகளில் ஏற்பட்ட அதிகரிப்பும் முக்கிய காரணங்களாக அமைந்தன. மக்கள் நலனோம்புகைத் துணைச் சுட்டெண்ணினைப் பொறுத்தவரை முக்கியமான மேம்பாடுகள், நலவசதிகள், கல்வியின் தரம், மக்கள் செல்வம் மற்றும் சூழல் தூய்மை ஆகிய அம்சங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 2018ஆம் ஆண்டுப்பகுதியில் சமூக பொருளாதார உட்கட்டமைப்பு துணைச் சுட்டெண்ணும் மெதுவாக அதிகரித்தமைக்கு மின்வலு, போக்குவரத்து மற்றும் தகவல் மற்றும் தொடர்பூட்டல் தொழில்நுட்பவியல் வசதிகள் என்பனவற்றின் கிடைப்பனவிலும் குழாய்வழி நீரின் தரத்திலும் ஏற்பட்ட முன்னேற்றங்களே முக்கிய காரணங்களாகும்.
-
Forensic Audits
2015 பெப்புருவரி 01ஆம் திகதி தொடக்கம் 2016 மாச்சு 31ஆம் திகதி வரையான காலப்பகுதியின் போது திறைசேரி முறிகளை வழங்கல் தொடர்பாக பரீட்சித்துப் பார்த்து புலனாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான சனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் பரிந்துரைகள், கணக்காய்வு அறிக்கைகளில் அண்மைய ஆண்டுக் காலங்களில் வெளிச்சத்திற்கு வந்த விடயங்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட சில ஒழுங்குமுறைப்படுத்தல் அத்துடன் முகவர் தொழிற்பாடுகளுடன் தொடர்புடைய உள்ளக விசாரணைகளில் கண்டறியப்பட்டவைகள் என்பனவற்றின் விளைவாக இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் ஆலோசனையுடன் ஏற்புடைய அரசாங்கப் பெறுகை வழிகாட்டல்களுடன் இணங்கி அமைச்சரவை நியமித்த ஆலோசகர்கள் பெறுகைக் குழுவினால் தெரிவுசெய்யப்பட்டிருந்த உலகளாவிய நடைமுறையுடனும் பன்னாட்டு அனுபவத்துடனும் கூடிய கணக்காய்வு நிறுவனங்களின் இலங்கைக்கு வெளியிலமைந்த ஆளணியினால் முழுமையாகக் கொண
-
32nd Annual Conference of Asian Credit Supplementation Institutions Confederation (ACSIC) - 2019, Colombo Sri Lanka
ஆசிய கொடுகடன் துணைநிரப்பு நிறுவனங்கள் கூட்டு ஒன்றியத்தின் 32ஆவது மாநாடு - 2019 இலங்கை மத்திய வங்கியின் அனுசரணையுடன் கொழும்பிலுள்ள சினமன் லேக்சைட் ஹோட்டலில் 2019 ஒத்தோபர் 28-30 வரை நடைபெற்றது.
-
The Central Bank Publishes 'Recent Economic Developments: Highlights of 2019 and Prospects for 2020'
இலங்கை மத்திய வங்கி, “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2019இன் முக்கிய பண்புகளும் 2020 இற்கான வாய்ப்புக்களும்” என்பதனை இன்றைய தினம் கணனிவழி அதேநேர முறைமையில் வெளியிட்டுள்ளது. இந்தப் பிரசுரம் மத்திய வங்கியின் இணையத்தளத்தில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தரவிறக்கப்படலாம் .
மேற்குறிப்பிட்ட வெளியீட்டில் பிரதிபலிக்கப்பட்டவாறு 2019இல் இலங்கைப் பொருளாதாரத்தின் செயலாற்றம் தொடர்பான சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.
-
IMF Executive Board Completes the Sixth Review of Sri Lanka’s Extended Arrangement under the Extended Fund Facility
•இலங்கை ஆறாவது மீளாய்வினை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்து ஆதரவு நிதியத்தின் அடுத்த பகிர்ந்தளிப்பினை இயலச் செய்துள்ளது.
•தாக்குப்பிடிக்கும் தன்மையை வலுப்படுத்துவதற்கும் உறுதியானதும் அனைத்தையுமுள்ளடக்கியதுமான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் நிலைத்து நிற்கும்கொள்கை ஒழுங்காற்று தொடர்ந்தும் இன்றியமையாததாகவிருக்கின்றது.
•அரசிறையின் சேகரிப்பு அரச படுகடனை ஒரு கீழ்நோக்கிய பாதையில் வைத்திருக்கும் வேளையில், சமூக மற்றும் முதலீட்டு செலவினத்தினை பாதுகாப்பதற்கும் மையமாகவிருக்கும்.
-
Regulatory actions taken by the Central Bank of Sri Lanka on The Finance Company PLC
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ், உரிமமளிக்கப்பட்ட நிதிக் கம்பனியொன்றான த பினான்ஸ் கம்பனி பிஎல்சி 2018இல் செலிங்கோ குழுமத்தினுள் காணப்பட்ட பல எண்ணிக்கையான நிதியியல் நிறுவனங்களின் தோல்வியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போதிருந்து கம்பனியின் நிதியியல் நிலைமை படிப்படியாக சீர்குலைந்து கடுமையான திரவத்தன்மை நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது. வாய்ப்புக்களைக் கொண்ட முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கும் கம்பனியினை மீளமைப்பதற்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அத்தகைய முயற்சிகள் திருப்திகரமான மட்டத்தில் இன்னமும் வெற்றியளிக்கவில்லை.