• Securitised Financing Arrangement for the Government of Sri Lanka

    Sri Lanka receives around United States Dollars (USD) 7,000 million in workers’ remittances annually. On the strength of this steady foreign currency inflow, the Government of Sri Lanka (GOSL) intends to raise medium-term foreign currency financing, by securitising foreign currency receipts of the Central Bank of Sri Lanka (CBSL) under the mandatory sale of 10 per cent of workers’ remittances converted into Sri Lankan Rupees by licensed banks. Since the introduction of this mandatory sale requirement on 28 May 2021, an average of USD 25 million per month has been accumulated under this arrangement by the CBSL. With recent focused efforts to strengthen remittance flows by the CBSL in collaboration with stakeholder agencies, such inflows are expected to increase in the coming years.

    The proposed Securitised Financing Arrangement (SFA) would be denominated in USD, Euro, Chinese Renminbi (RMB), Japanese Yen (Yen), or in any Gulf Cooperation Council (GCC) currency. The SFA is expected to be raised at a fixed or a floating rate for a medium-term tenure. Repayment can be in bullet or in tranches, or on a reducing balance linked to the securitised arrangement, while interest can be paid periodically, as mutually agreed. The proceeds of the SFA will be used for the purposes of financing the expenditure as approved in the Annual Budget of the GOSL.

  • The Central Bank publishes “Recent Economic Developments: Highlights of 2021 and Prospects for 2022”

    இலங்கை மத்திய வங்கி “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகள்: 2021இன் முக்கிய பண்புகளும் 2022இற்கான வாய்ப்புக்களும்” இனை இன்று நிகழ்நிலையில் வெளியிட்டது. இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தின் வாயிலாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியீட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

    “அண்மைக்கால பொருளாதார அபிவிருத்திகளில்” பிரதிபலிக்கப்பட்டவாறு 2021இல் இலங்கைப் பொருளாதாரச் செயலாற்றத்தின் பொதுநோக்கொன்று கீழே தரப்பட்டுள்ளது:

  • Future Benefits for Sri Lankan Expatriates Working Abroad to be Linked to Quantum of Remittances

    வெளிநாட்டில் தொழில்புரிகின்ற இலங்கையர்களால் அனுப்பப்படுகின்ற பணவனுப்பல்கள், கடந்த 5 வருடங்களாக ஐ.அ.டொலர் 7 பில்லியனுக்கும் அதிகமாக வருடாந்த சராசரி பெறுமதியுடன் நாட்டினுள் வருகின்ற முக்கிய வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சலொன்றாக இருந்து வருகின்றது. இவ்வுறுதியான, படுகடன் அல்லாத உட்பாய்ச்சலைக் கருத்திற்கொண்டு, அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் பணியாளருக்கும் அதேபோன்று அரசாங்கத்திற்கும் நன்மைபயக்கின்ற விதத்தில் பணவனுப்பல்கள் அவற்றின் முழுமையான உள்ளார்ந்தங்களையும் அடைந்துகொள்வதை உறுதிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கின்ற செயன்முறைகளை முன்னெடுக்கின்றன.

  • New rules to convert export proceeds will result in multiple benefits to the country and have no impact on inward remittances by Sri Lankans working abroad

    கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றிலிருந்து உறுதியான சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கை, பேரண்டப் பொருளாதார மற்றும்  நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை நோக்கிய முனைப்புடனானதொரு பாதையில் தடம் பதித்துள்ளது. உலகளாவிய நோய்த்தொற்று நாட்டிற்கான வெளிநாட்டுச் செலாவணி வருமானத்தில் கணிசமானதொரு இழப்பினை விளைவித்த போதும் இறை, நாணய மற்றும் பொது சுகாதார விடயங்களில் அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் வழங்கப்பட்ட முன்னெப்பொழுதுமில்லாத ஆதரவு பொருளாதாரத்தின் வலுவான மீளெழுச்சிக்கும் அதேபோன்று சில வெளிநாட்டுச் செலாவணியீட்டும் துறைகளில் கணிசமானதொரு மீட்சிக்கும் துணைபுரிந்துள்ளது. சுற்றுலாத் துறையும் எதிர்வரும் காலப்பகுதியில் குறிப்பிடத்தக்கதொரு மீட்சியைக் காண்பிக்குமென எதிர்பார்க்கப்படுவதுடன் முறைசார் வழிகளினூடாக தொழிலாளர் பணவனுப்பல் உட்பாய்ச்சல்களை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டுச் சந்தையில் காணப்பட்ட அண்மைய பதட்ட நிலைகளும் பொருளாதாரத்தினைப் பல்வேறு வகையிலான அதிர்வுகளுக்கு உட்படுத்தும் அதன் வெளிநாட்டுக் கடன்பாடுகளை அதிகரிப்பதற்குப் பதிலாக இலங்கை காலப்போக்கில் பொருளாதாரத்தினை வலுப்படுத்தும் வெளிநாட்டுச் செலாவணி வருவாய்களின் மீது அதனுடைய தங்கியிருக்கும் தன்மையினை அதிகரிப்பதற்கான தேவையினை எடுத்துக்காட்டியுள்ளது. 

  • Moratoria to COVID-19 affected businesses and individuals has exceeded Rs.4,000 billion: Saubagya loans amount to over Rs.179 billion

    இலங்கை மத்திய வங்கியினால் மேற்பார்வை செய்யப்படுகின்ற நிதியியல் நிறுவனங்களூடாக கொவிட்-19 மூலம் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு உதவுவதற்கு இலங்கை மத்திய வங்கி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்காக மீள்கொடுப்பனவுக் காலங்களை நீடித்தல், சலுகை வட்டி வீதங்கள், தொழிற்படு மூலதனக் கடன்கள், படுகடனை காலம்தாழ்த்திச் செலுத்தும் வசதிகள், கொடுகடன் வசதிகளை மீளக்கட்டமைத்தல்/ மீள அட்டவணைப்படுத்தல் போன்றவற்றை இத்திட்டங்கள் உள்ளடக்குகின்றன. 

    பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகளுக்கு அதாவது சுற்றுலா, ஆடை, பெருந்தோட்டம், தகவல் தொழில்நுட்பம், ஏற்பாட்டுச் சேவை வழங்குநர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், பாடசாலை வான்களைத் தொழிற்படுத்துவோர், பாரஊர்திகள், பொருட்களை கொண்டுசெல்கின்ற சிறிய ரக வாகனங்கள் மற்றும் பேருந்துக்கள் போன்ற சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கும் இச்சலுகைகள் அதிகளவில் உதவின. 

  • Writ Application against Governor Ajith Nivard Cabraal dismissed by the court of Appeal

    மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக திரு.கீர்த்தி தென்னகோன் என்பவரினால் (தென் மாகாண முன்னாள் ஆளுநர்) தாக்கல்செய்யப்பட்ட பேராணை விண்ணப்பம் (CA Writ 417/2021)இ மனுதாரரினால் முதல் நோக்கிலிடு வழக்கொன்றாக தாக்கல்செய்யப்படாத காரணத்தின் அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று நிராகரிக்கப்பட்டது. 

    ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக திரு. ஆரியவன்ச திசாநாயக்க என்பவரினால் (முன்னாள் சனாதிபதி வேட்பாளர்) தாக்கல்செய்யப்பட்ட மற்றுமொரு பேராணை விண்ணப்பமும் கடந்த வாரம் மனுதாரரினால் மீளப்பெறப்பட்டது.

  • Establishment of Foreign Remittances Facilitation Department of the Central Bank of Sri Lanka

    உள்நாட்டு பெறுமதிசேர்த்தலின் ஏறத்தாழ 100 சதவீதத்தினைக் கொண்டு தொழிலாளர் பணவனுப்பல்கள், இலங்கையின் வெளிநாட்டு நாணய வருவாய்களின் முக்கிய தூணொன்றாகவிருந்து நாட்டின் வெளிநாட்டுத் துறையின் தாக்குபிடிக்கும் தன்மைக்கு கணிசமான ஆதரவு வழங்குகின்றன. தொழிலாளர் பணவனுப்பல்கள் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேல் வருடாந்த வர்த்தகப் பற்றாக்குறைக்கெதிராக ஏறத்தாழ 80 சதவீதத்துக்கு காப்பீடு வழங்கியதுடன் பணவனுப்பல்களின் உட்பாய்ச்சல்களை வலுப்படுத்துவது முறைசார்ந்த வங்கித்தொழில் முறைமைக்கு சீரான வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களை வழங்குதல் அத்துடன் வருமான மற்றும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல் உள்ளடங்கலாக பல்வேறு சமூகப்-பொருளாதார நன்மைகளைக் கொண்டுவரும்.

  • Imposition of Administrative Penalties by the Financial Intelligence Unit (FIU) to Enforce Compliance on Financial Institutions during the Third Quarter of 2021

    2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதியியல் நிறுவனத்தின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் கடுமையை கருத்திற்கொண்டு தண்டப்பணம் விதித்துரைக்கப்படலாம்.

     அதற்கமைய, பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நிதியிடலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துனராக, நிதியியல் உளவறிதல் பிரிவு நிதியியல் நிறுவனங்கள் மீதான இணங்குவிப்பை அமுல்படுத்துவற்கு, கீழே குறிக்கப்பட்டவாறு 2021 யூலை 01 தொடக்கம் 2021 செத்தெம்பர் 30 வரையான காலப்பகுதிக்கு மொத்தமாக ரூ. 2.0 மில்லியன் தொகையினை தண்டப்பணமாக சேகரித்தது. சேகரிக்கப்பட்ட தண்டப்பணம் திரட்டுநிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டது.

  • CCPI based Inflation increased to 7.6 per cent in October 2021

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 செத்தெம்பரில் 5.7 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 7.6 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம், (ஆண்டிற்கு ஆண்டு) 2021 செத்தெம்பரில் 10.0 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 12.8 அதிகரித்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 செத்தெம்பரில் 3.8 சதவீதத்திலிருந்து 2021 ஒத்தோபரில் 5.4 சதவீதத்திற்கு அதிகரித்தது.

  • Central Bank Issues New Rules on Conversion of Export Proceeds

    இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஏற்கனவே காணப்படுகின்ற விதிகளை நீக்கி ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கைக்கு அனுப்புதல் அத்துடன் அத்தகைய ஏற்றுமதிப் பெறுகைகளை இலங்கை ரூபாவாக மாற்றுதல் தொடர்பில் 2021 ஒத்தோபர் 28ஆம் திகதியிடப்பட்ட 2251/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்டவாறு புதிய விதிகளை வழங்கியுள்ளது. புதிய விதிகள் இலங்கையில் பொருட்கள் மற்றும் பணிகள் ஏற்றுமதி செய்கின்ற இருசாராருக்கும் ஏற்புடையதாகும். 

Pages