• CCPI based Inflation increased to 5.7 per cent in July 2021

    கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது 2021 யூனின் 5.2 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 5.7 சதவீதத்திற்கு அதிகரித்தது. இது, உணவல்லா வகைகளின் பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் தூண்டப்பட்டிருந்தது. அதன் பின்னர், உணவுப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூனின் 11.3 சதவீதத்திலிருந்து 2021 யூலை 11.0 சதவீதத்திற்கு குறைவடைந்த அதேவேளை, உணவல்லா பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2021 யூனின் 2.5 சதவீதத்திலிருந்து 2021 யூலை 3.2 சதவீதத்திற்கு அதிகரித்தது.

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2021 யூனின் 4.1 சதவீதத்திலிருந்து 2021 யூலையில் 4.2 சதவீதத்திற்கு சிறிதளவால் அதிகரித்தது.

  • NCPI based Inflation remained unchanged in June 2021

    தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 யூனில் 6.1 சதவீதத்தில் மாற்றமின்றிக் காணப்பட்டது. இதற்கு, 2020 யூனில் நிலவிய உயர்வான தள புள்ளிவிபரத் தாக்கம் காரணமாக அமைந்தது. அதேவேளை, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மேயின் 10.3 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 9.8 சதவீதத்திற்கு குறைவடைந்ததுடன் உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2021 மேயின் 2.5 சதவீதத்திலிருந்து 2021 யூனில் 2.9 சதவீதத்திற்கு அதிகரித்தது.

    ஆண்டுச் சராசரியின் அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணும் 2021 யூனில் 5.4 சதவீதமாக மாற்றமின்றிக் காணப்பட்டது. 

  • Imposition of Administrative Penalties by the Financial Intelligence Unit (FIU) to Enforce Compliance on Financial Institutions during the Second Quarter of 2021

    2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டு நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்காமைக்காக நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டங்கள் விதிக்கப்படுகின்றன. தண்டமானது நிதியியல் நிறுவனத்தின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் கடுமை என்பவற்றைப் பரிசீலனையில்கொண்டு குறித்துரைக்கப்படக்கூடியதாகும்.

    அதற்கமைய, பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துநராக நிதியியல் உளவறிதல் பிரிவானது நிதியியல் நிறுவனங்கள் மீது இணங்குவித்தலினை அமுல்படுத்துவதற்கு 2021 ஏப்பிறல் 01 தொடக்கம் 2021 யூன் 30 வரையான காலப்பகுதிக்காக மொத்தமாக ரூ.3.0 மில்லியன் தொகையுடைய தண்டங்களை விதித்துள்ளது. தண்டங்களாகச் சேகரிக்கப்பட்ட பணம், திரட்டு நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டன.

  • Response to the Announcement made by Moody's Investors Service

    இலங்கையின் நாட்டிற்கான தரப்படுத்தல் தொடர்பில் மூடீஸ் இன்வெஸ்டர்ஸ் சேர்விஸஸ் (Moody’s Investors Service) நிறுவனத்தின் மூலமான அறிவிப்பினைத் தொடர்ந்து, நிதி அமைச்சு அதற்கான பதிலிறுத்தலொன்றினை வழங்கியுள்ளது. கீழேயுள்ள இணைய இணைப்பினூடாக அதனைப் பார்வையிட முடியும்:

  • Special Publication by the Central Bank of Sri Lanka on “The 70 Year Journey of Currency Issue and Management”

    இலங்கை மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற தொடர்பூட்டல் பணிப்பாளர் செல்வி செலோமி எச் குணவர்த்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற மூத்த முகாமையாளர் திரு. டபிள்யு எம் கே வீரகோன் ஆகியோர் இணைந்து எழுதிய “70 ஆண்டு நாணய வழங்கல் மற்றும் முகாமைத்துவப் பயணம்” எனும் தலைப்பில் இலங்கையில் பயன்படுத்தப்படும் நாணய வரலாறு பற்றிய விசேட நூலொன்றை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

  • Release of ‘Economic and Social Statistics of Sri Lanka – 2021’ Publication

    “இலங்கையின் பொருளாதார சமூகப் புள்ளிவிபரங்கள் - 2021” என்ற இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.

  • Sri Lanka Purchasing Managers’ Index - June 2021

    தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிற்குமான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் யூனில் மீட்சியடைந்தன.

    கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் மூன்றாம் அலையின் பாதகமான தாக்கங்களிலிருந்து தயாரிப்பு நடவடிக்கைகள் 2021 யூன் காலப்பகுதியில் சிறிதளவு மீட்சியடைந்தன.

    பணிகள் கொ.மு.சுட்டெண் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக வீழ்ச்சியடைந்ததன் பின்னர் 51.3 கொண்ட சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து 2021 யூனில் வளர்ச்சி எல்லைக்கு திரும்பியது.

  • External Sector Performance - May 2021

    வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2021 மேயில் விரிவடைந்தது. 2020 மேயிலும் பார்க்க ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் 2021 மேயில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துக் காணப்பட்டமைக்கு முக்கியமாக ஓராண்டிற்கு முன்னைய உலகளாவிய நோய்த்தொற்றின் புள்ளிவிபர அடிப்படைத் தாக்கங்களுடன் தொடர்புடைய இடையூறுகளே காரணமாக அமைந்தன. முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2021 மேயில் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்கள் அதிகரித்திருந்த வேளையில், இறக்குமதிகள் வீழ்ச்சியடைந்தன. இம்மாத காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் தொடர்ந்தும் அதிகரித்திருந்த வேளையில், சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் குறைந்த மட்டங்களிலேயே காணப்பட்டன. நிதியியல் கணக்கில், அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையிலுள்ள வெளிநாட்டு முதலீடுகள் 2021 மேயில் சிறிதளவான தேறிய வெளிப்பாய்ச்சலைப் பதிவுசெய்தன. அதேவேளை, இலங்கை ரூபா இம்மாதம் முழுவதும் பரந்தளவில் நிலையாகக் காணப்பட்டதுடன் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2021 மே மாத இறுதிக்காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 4.0 பில்லியனாக விளங்கியது.

  • Re-appointment of Mr Sanjeeva Jayawardena, President’s Counsel to the Monetary Board of the CBSL

    சனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்த்தன அவர்களின் பெயர் நாணயச் சபைக்கு பெயர்குறிக்கப்பட்டதை பாராளுமன்றப் பேரவை அங்கீகரித்ததைத் தொடர்ந்து  அதிமேதகு சனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷஅவர்களினால் 2027 யூன் வரை ஆறு ஆண்டுகளைக் கொண்ட புதிய பதவிக்காலத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு அவர் மீளவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    திரு. சஞ்சீவ ஜயவர்த்தன இலங்;கை மத்திய வங்கியின் நாணயச் சபையில் பணியாற்றும் முதலாவது சனாதிபதி சட்டத்தரணியாக விளங்குகின்றார்.

    தற்பொழுது இவர் வெளிநாட்டுப் படுகடன் கண்காணிப்புக் குழுவின் நாணயச் சபை மட்டத் தலைவராகவும் சபை இடர்நேர்வு மேற்பார்வைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றுகின்றார். இலங்கை மத்திய வங்கியின் ஒழுக்கவியல் குழுவிற்கும் இவர் தலைமைதாங்குகின்றார்.

  • Local Companies Permitted to Invest in the International Sovereign Bonds in the Secondary Market

    இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் நாட்டிற்கான பன்னாட்டு முறிகளை இரண்டாந்தரச் சந்தையில் கொள்வனவு செய்வதற்கு 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளை (2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்திற்கமைவாக நிதி வியாபாரத்தில் ஈடுபடுகின்ற கம்பனிகள் நீங்கலாக) அனுமதிப்பதற்கு 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளுக்கமைவாக கௌரவ நிதி அமைச்சர், அமைச்சரவையின் ஒப்புதலுடன் ஒழுங்குவிதிகளை வழங்கியுள்ளார்.

    மேற்குறித்த ஒழுங்குவிதிகளின் பிரகாரம், நடைமுறையிலுள்ள வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதிகளின் நியதிகளுக்கமைவாகவும் பின்வருகின்ற நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டும் இலங்கைக்கு வெளியே வதிகின்ற ஆளொருவரிடமிருந்து கடன்பெற்ற வெளிநாட்டு நாணயத்தின் 50% இனை உபயோகப்படுத்தி நாட்டிற்கான பன்னாட்டு முறிகளில் கம்பனிகள் முதலிடலாம்.

Pages