இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை மாற்றமின்றிப் பேணுகின்றது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் ஆகிய இரண்டிலும் பரிணமிக்கின்ற அபிவிருத்திகள் மற்றும் தோற்றப்பாட்டை கவனமாகப் பரிசீலனையிற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கை நோக்கி வழிநடாத்துவதற்குத் துணையளிக்குமென சபை கருதுகின்றது. 

முழுவடிவம்

Published Date: 

Wednesday, November 26, 2025