முறைசார் நிதி நிறுவனங்கள் மற்றும் தாங்கக் கூடிய நிதியியல் சேவைகள் தொடர்பான விழிப்பூட்டல் நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகமானது லுனுகம் வெஹரவிலுள்ள சமுர்த்தி சமூகம் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாண்மையாளர்களுக்காக 2018 மே 17ஆம் திகதி மு.ப. 09.00 மணி தொடக்கம் லுனுகம் வெஹரபுராண ரஜ மகாவிகாரையில் நடாத்தியது.










தெய்யந்தர தேசிய பாடசாலை மாணவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'கல்விக் கருத்தரங்கு' 2018 செத்தெம்பா 12அன்று இலங்கை மத்திய வங்கியின் மாத்தறை பிரதேச அலுவலகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 60 மாணவர்கள் பங்கேற்றனா்.