இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 நவெம்பர் 26ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை மேலும் தளர்த்துவதற்கும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஓரிரவுக் கொள்கை வீதத்தினை 8.00 சதவீதமாக நிர்ணயிப்பதற்கும் தீர்மானித்துள்ளது. இம்மாற்றத்துடன் கொள்கை வட்டி வீதத்தின் வினைத்திறனான குறைப்பானது நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பின் தொழிற்பாட்டு இலக்காகத் தொடர்ந்து தொழிற்படுகின்ற சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தின் தற்போதைய மட்டத்திலிருந்து ஏறத்தாழ 50 அடிப்படைப் புள்ளிகளாக அமையும்.
-
The Central Bank of Sri Lanka introduces the Overnight Policy Rate and further eases its monetary policy stance
-
The Central Bank of Sri Lanka implements a Single Policy Interest Rate Mechanism by Introducing the Overnight Policy Rate
ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையின் திட்டமிடப்பட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பில் சனவரி 2024இல் இலங்கை மத்திய வங்கியின்; ஆண்டுக்கான கொள்கை அறிக்கையிலும் அதனை தொடர்ந்து 2024 செத்தெம்பரிலும் அறிவிக்கப்பட்டவாறு, இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையானது 2024 நவெம்பர் 27இலிருந்து இரட்டைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையிலிருந்து ஒற்றைக் கொள்கை வட்டி வீதப் பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்தது. இது மத்திய வங்கியினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்பில் மேலுமொரு குறிப்பிடத்தக்க மேம்பாட்டை குறிக்கிறது. இதற்கமைய, மத்திய வங்கி தனது நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை சமிக்ஞை செய்வதற்கும் தொழிற்படுத்துவதற்கும் அதன் முதன்மை நாணயக் கொள்கைக் கருவியாக ஓரிரவு கொள்கை வீதத்தினை அறிமுகப்படுத்துகிறது. இலங்கை மத்திய வங்கியின் நாணயக்; கொள்கை நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தைக் குறித்துக்காட்டி தொடர்பூட்டுவதற்கு ஓரிரவு கொள்கை வீதமானது காலத்திற்குக் காலம் மீளாய்வு செய்யப்பட்டு தேவைக்கேற்ப சீராக்கப்படும். இந்த மாற்றம், நிதியியல் சந்தைகள் மற்றும் பரந்த பொருளாதாரத்திற்கு நாணயக் கொள்கை சமிக்ஞையிடலின் வினைத்திறன் மற்றும் செயற்றிறனையும் ஊடுகடத்தலையும் மேம்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.
-
Administrative Penalties imposed by the Financial Intelligence Unit (FIU) on Reporting Institutions from May to October 2024
2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்களின் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை பரிசீலனையிற் கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.
-
IMF Reaches Staff-Level Agreement on the Third Review under Sri Lanka’s Extended Fund Facility Arrangement
பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டதின் மூன்றாவது மீளாய்வினை நிறைவுசெய்வதற்கான பொருளாதாரக் கொள்கைகள் குறித்த அலுவலர் மட்ட உடன்படிக்கையினை பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களும் இலங்கை அதிகாரிகளும் எட்டியுள்ளனர். மீளாய்வானது பன்னாட்டு நாணய நிதியத்தின் முகாமைத்துவத்தினால் ஒப்புதலளிக்கப்பட்டு, பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையினால் நிறைவுசெய்யப்பட்டவுடன் நிதியிடலில் ஏறத்தாழ ஐ.அ.டொலர் 333 மில்லியன் தொகைக்கான அணுகலினை இலங்கை கொண்டிருக்கும்.
-
SL Purchasing Managers’ Index (PMI) – October 2024
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 ஒத்தோபரில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2024 ஒத்தோபரில் 58.1 ஆக அதிகரித்து. தயாரிப்பு நடவடிக்கைகளில் மேலும் விரிவடைதலை எடுத்துக்காட்டியது. இம்மேம்பாடானது அனைத்துத் துணைச் சுட்டெண்களிலிருந்தும் கிடைத்த சாதகமான பங்களிப்புகளுடன் பருவ காலக் கேள்வியினால் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது.
-
Financial Intelligence Unit of Sri Lanka entered into a Memorandum of Understanding with the National Secretariat for Non-Governmental Organizations
இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, பணம் தூயதாக்குதல், பயங்கரவாதி நிதியிடல் மற்றும் இணைந்த குற்றங்கள் மற்றும் அதனுடன் இணைந்த எவரேனும் ஆட்கள் பற்றி விசாரணைகள் மற்றும் வழக்குத்தொடுத்தல்கள் மீது தகவல்களைப் பரிமாற்றுவதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்துடன் 2024 நவெம்பர் 04 அன்று இலங்கை மத்திய வங்கியில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைக் கைச்சாத்திட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது, 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின் பிரகாரம் நிதியியல் உளவறிதல் பிரிவினால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
-
CCPI based headline inflation remained in the negative territory in October 2024
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021ஸ்ரீ100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கமானது இலங்கை மத்திய வங்கியின் அண்மைய கால எறிவுகளுக்கு இசைவாக, தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாகவும் எதிர்மiறாயான புலத்தில் காணப்பட்டு, 2024 செத்தெம்பரின் 0.5 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2024 ஒத்தோபரில் 0.8 சதவீதம் கொண்ட பணச்சுருக்கத்தினைப் பதிவுசெய்தது.
-
External Sector Performance - September 2024
வெளிநாட்டுத் துறையானது 2023இன் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2024இன் இதுவரையான காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமொன்றினைத் தொடர்ந்தும் பதிவுசெய்தது. வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2024 செத்தெம்பரில் (ஆண்டிற்காண்டு) விரிவடைந்து, 2024இன் இதுவரையான காலப்பகுதியில் உயர்ந்தளவிலான மாதாந்த வர்த்தகப் பற்றாக்குறையொன்றினைப் பதிவுசெய்தது.
-
SL Purchasing Managers’ Index (PMI) for Construction Industry – September 2024
கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 48.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்திருந்த மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 செத்தெம்பரில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் வீழ்ச்சியொன்றினை எடுத்துக்காட்டுகின்றது. மாதகாலப்பகுதியில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் குறிப்பாக தேர்தல் தொடர்புபட்ட இடையூறுகள் காரணமாக சிறிதளவான மிதமடைதலை பல அளவீட்டு பதிலிறுப்பாளர்கள் அவதானித்தனர்.
-
An Explanatory Note on Central Bank of Sri Lanka's Open Market Operations (OMOs) and Money Printing
இலங்கை மத்திய வங்கி அதன் திறந்த சந்தைத் தொழிற்பாடுகளூடாக 2024 ஒத்தோபர் 25 அன்று ரூ.100 பில்லியன்களை “அச்சிட்டது” எனக் குறிப்பிட்டு அண்மையில் அறிக்கைகள் வெளிவந்தன. இவ்வறிக்கைகள் செம்மையற்றவை மற்றும் அடிப்படையற்றவை என்பதை தெளிவுபடுத்துவது முக்கியமானதாகும். திறந்த சந்தைத் தொழிற்பாடுகளூடாக திரவத்தன்மையை (பணம்) உட்செலுத்துவது பொருளாதாரத்தில் குறுகிய கால வட்டி வீதங்களை நிலைநிறுத்தி விலை நிலையுறுதியை உறுதிசெய்யும் நோக்கத்திற்காக வங்கித்தொழில் முறைமையில் போதுமான திரவத்தன்மையை முகாமைசெய்வதை நோக்காகக்கொண்ட வழமையான மத்திய வங்கித் தொழிற்பாடொன்றாகும். ஆகையினால் அது “நாணயம் அச்சிடல்” என ஒட்டுமொத்தமாக தவறாகப் பொருள்கொள்ளப்பட முடியாது.