இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க அவர்கள் மூலம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டதாக கூறப்படுகின்ற கட்டுரையொன்றின் சிங்கள மொழிபெயர்ப்பு இந்நாட்களில் இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்பட்டு வருகின்றது.
எடுத்துக்காட்டாக, “பணவீக்கம் என்பது பிரச்சனையொன்றல்ல ஆனால் தீர்வொன்றாகும்…… இப்பொருளாதார நெருக்கடி எங்களுக்கேற்பட்ட சிறந்த விடயமொன்றாகவிருக்கலாம் - மத்திய வங்கியின் ஆளுநர் கூறுகின்றார்” என்ற தலைப்பின் கீழ் அல்லது இதேபோன்ற தலைப்புகளின் கீழ் கட்டுரைகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரந்தளவில் வெளியிடப்படுகின்ற பல சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.