கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2021ஸ்ரீ100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2024 மேயின் 0.9 சதவீதத்திலிருந்து 2024 யூனில் 1.7 சதவீதத்திற்கு உயர்வடைந்தது. முதன்மைப் பணவீக்கத்தில் ஏற்பட்ட இவ்வுயர்வடைதலானது பரந்தளவில் இலங்கை மத்திய வங்கியின் எறிவுகளுக்கு இசைவாக காணப்படுகின்றது. இவ்வதிகரிப்புடனும் கூட பணவீக்கமானது 5 சதவீதம் கொண்ட பணவீக்க இலக்கிற்கு நன்கு கீழ் காண்ப்படுகின்றது.
-
CCPI based headline inflation accelerated in June 2024
-
External Sector Performance - May 2024
2024 மேயில் வெளிநாட்டுத்துறையானது சுருக்கமடைந்த வர்த்தகப் பற்றாக்குறையொன்று, பணிகள் கணக்கில் உயர்வடைந்த உட்பாய்ச்சல்கள் மற்றும் உயர்வடைந்த தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டது.
வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது ஆண்டிற்காண்டு அடிப்படையில் 2024 மேயில் சுருக்கமடைந்தபோதிலும் 2024 சனவரி தொடக்கம் மே வரையான காலப்பகுதியில் விரிவடைந்து காணப்பட்டது.
-
SL Purchasing Managers’ Index (PMI) for Construction Industry – May 2024
கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 2024 மேயில் 54.5 சுட்டெண் பெறுமதியைப் பதிவுசெய்து, கட்டடவாக்க நடவடிக்கைகளில் மேம்படுதலை எடுத்துக்காட்டியது. முன்னைய மாதத்தின் நீண்ட விடுமுறை நாட்களுக்குப் பின்னர் பல கட்டடவாக்க செயற்றிட்டங்கள் மேயில் வழமைக்கு திரும்பின. எவ்வாறாயினும், நிலவிய பாதகமான வானிலை நிலைமைகள் எதிர்பார்க்கப்பட்ட மேம்படுதலை தடைபடுத்தின என பல பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.
-
Implementation of the Banking (Amendment) Act, No 24 of 2024
2024ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க வங்கித்தொழில் (திருத்தச்) சட்டம் 2024.06.15ஆம் நாளிலிருந்து நடைமுறைக்குவந்திருக்கின்றது என்பதனை இலங்கை மத்திய வங்கி அறிவிக்கவிரும்புகின்றது. இத்திருத்தங்கள், வங்கித்தொழில் துறையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை மேம்படுத்துவதற்காக உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள் (உரிமம்பெற்ற வங்கிகள்) என்பனவற்றிற்கு ஏற்புடைத்தான சட்டம் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பினை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
வங்கித்தொழில் வியாபாரத்தினை கொண்டு நடத்துகின்ற ஆட்களுக்கு உரிமம் வழங்குவதற்கான ஒழுங்குமுறைகளின் அறிமுகத்தையும் செயற்பாடுகளையும் வங்கித்தொழில் வியாபாரத்துடன் தொடர்பான ஒழுங்குவிதிகள் மற்றும் கட்டுப்பாட்டு விடயங்களையும் வழங்குகின்ற வங்கித்தொழில் சட்டமானது 2006இல் இறுதியாகத் திருத்தப்பட்டது. ஆகவே, இத்திருத்தங்கள், தற்போதைய ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பின் அபிவிருத்திகள், பொருளாதாரம் மற்றும் சந்தை அபிவிருத்திகள், உள்நாட்டு வங்கித்தொழில் துறையின் பின்னணியில், சிறந்த நடைமுறைகள் மற்றும் முன்மதியுடைய தேவைப்பாடுகள் மீதான பன்னாட்டு நியமங்கள் என்பனவற்றைப் பரிசீலனையில் கொண்டு வடிவமைக்கப்பட்டன. மேலதிகமாக, வங்கித்தொழில் சட்டத்திற்கு திருத்தங்களை வரையும் போது, ஏற்புடைத்தானவிடத்து, தொடர்பான ஆர்வலர்களிடமிருந்து, அதாவது, வங்கித்தொழில் துறை, வங்கிகளில் கணக்காய்வுகளை நடத்தும் கணக்காய்வாளர் குழு, ஏனைய ஒழுங்குமுறைப்படுத்துனர்கள் மற்றும் அதிகாரபீடங்களின் அவதானிப்புக்களும் கருத்துக்களும் பரிசீலனையில் கொள்ளப்பட்டன.
-
Administrative Penalties imposed by the Financial Intelligence Unit (FIU) on Financial Institutions from 01 January 2024 to 30 April 2024
2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்ட அதிகாரங்களின் பயனைக்கொண்டு, நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதியியல் நிறுவனங்களின் தொடர்புடைய இணங்காமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றை பரிசீலனையிற்கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.
-
Appointment of New Deputy Governors of the Central Bank of Sri Lanka
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க ஆளும் சபையினால் பரிந்துரைக்கப்பட்டவாறு உதவி ஆளுநரும் ஆளும் சபைக்கான செயலாளருமான திரு. ஏ.ஏ.எம். தாசிம் மற்றும் உதவி ஆளுநரான திரு. ஜே.பி.ஆர். கருணாரத்ன ஆகியோரை முறையே 2024.06.20 மற்றும் 2024.06.24 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர்களாக கௌரவ நிதி அமைச்சர் நியமித்துள்ளார்.
-
Financial Intelligence Unit of Sri Lanka entered into a Memorandum of Understanding with the Financial Intelligence National Center of the Kingdom of Bahrain
இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது, பணம் தூயதாக்குதல் மற்றும் அதனுடன் இணைந்த ஊகக் குற்றங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடுவதுடன் தொடர்பான குற்றங்களுடன் தொடர்பான நிதியியல் உளவறிதல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக பிரான்சின் பாரிசில் நடைபெற்ற எக்மவுன்ட் குழுமத்தின் 30 ஆவது கூட்டத்தில், 2024 யூன் 04ஆம் நாளன்று பஹ்ரைன் இராச்சியத்தின் நிதியியல் உளவறிதல் தேசிய நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது, 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில் இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
-
Sri Lanka Purchasing Managers’ Index (Manufacturing and Services) - May 2024
கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2024 மேயில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் ஆகிய இரண்டிலும் முன்னேற்றங்களை எடுத்துக்காட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2024 மேயில் 58.2 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகளில் விரிவாக்கமொன்றைப் எடுத்துக்காட்டியது. தொழில்நிலை தவிர அனைத்து துணைச் சுட்டெண்களும் மாத காலப்பகுதியில், நடுநிலையான எல்லைக்கு மேலே உயர்வடைந்து, சுட்டெண் பெறுமதியில் ஒட்டுமொத்த அதிகரிப்பொன்றை விளைவித்தன.
பணிகளுக்கான இலங்கைக் கொ.மு.சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 55.0 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்த வியாபார நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2024 மேயில் பணிகள் நடவடிக்கைகளில் மெதுவான விரிவடைதலை எடுத்துக்காட்டியது.
-
Financial Intelligence Unit of Sri Lanka entered into a Memorandum of Understanding with the Commission to Investigate Allegations of Bribery or Corruption
இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவு, இலஞ்சம் அல்லது ஊழல் சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுடன் பணம் தூயதாக்குதல், இலஞ்சம் அல்லது ஊழல் மற்றும் ஏனைய தொடர்பான குற்றங்கள் பற்றிய புலனாய்வுகள் மற்றும் வழக்குத் தொடுப்புக்கள் தொடர்பான தகவல்களைப் பரிமாற்றிக்கொள்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை மேற்கொண்டிருக்கின்றது.
-
45th SAARCFINANCE Governors’ Meeting and Symposium
இலங்கை மத்திய வங்கி 2024 யூன் 13-14ஆம் திகதிகளில் 45ஆவது சார்க்பினான்ஸ்; ஆளுநர்களின் கூட்டம் மற்றும் கருத்தரங்கை நடாத்தியிருந்தது. இந் நிகழ்ச்சியில் ஆளுநர்கள், நிதிச் செயலாளர்கள், சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் மற்றும் சார்க் பிராந்தியத்தில் உள்ள மத்திய வங்கிகள் மற்றும் நிதி அமைச்சுக்களின் ஏனைய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
முதல் நாளில், “பன்முக - உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மத்திய வங்கியியல்” என்ற கருப்பொருளில் சார்க்பினான்ஸ்;; ஆளுநர்களின் கருத்தரங்கு கொழும்பில் உள்ள ஹில்டன் கொழும்பு விடுதியில் நடைபெற்றது. இலங்கையின் சனாதிபதியும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சருமான மேன்மைமிகு ரணில் விக்கிரமசிங்கே தொடக்க விழாவில் கலந்துகொண்டு பிரதான உரையை நிகழ்த்தினார். சமகால பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சனாதிபதி தனது உரையில் வலியுறுத்தினார். நாணய மற்றும் இறை உறுதிப்பாட்டின் அவசியத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியதுடன் நாட்டில் நீடித்திருக்கும் உறுதிப்பாட்டினை நிச்சயப்படுத்துவதற்கு சட்டக்கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்காக தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளைக் கோடிட்டுக்காட்டினார். சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர், தூதர் முகமது கேலாம் சர்வரும் தொடக்க விழாவில் கலந்து கொண்டார்.