முனைவர் (திருமதி) துஷ்னி வீரகோன், 2019 யூலை 29ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும்வகையில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முனைவர் (திருமதி) துஷ்னி வீரகோன், இலங்கை கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் அதன் பேரண்டப் பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சித் தலைவருமாவார். அவர், தனது முனைவர் பட்டத்தினை நிறைவு செய்து 1994இல் இலங்கை கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தில் இணைந்ததுடன் பேரண்ட பொருளாதாரக் கொள்கை, பிராந்திய வர்த்தக ஒருங்கிணைப்பு மற்றும் பன்னாட்டுப் பொருளாதாரங்கள் தொடர்பில் பரந்தளவில் எழுதி வெளியிட்டுள்ளார்.