2019 திசெம்பர் 19ஆம் நாளன்று இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குநர் செலுத்தத் தவறும் வீதம் மீதான தோற்றப்பாட்டிற்கான திருத்தம் தொடர்பான பிட்ஜ் றேட்டிங்கின் அறிவித்தலைத் தொடர்ந்து நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு பதிலிறுப்பொன்றினை விடுத்திருக்கிறது. கீழே காணப்படும் இணைப்பில் இதனைக் காணமுடியும்.
-
Response to the Revision of Sri Lanka’s Rating Outlook by Fitch Ratings
-
Sri Lanka Purchasing Managers’ Index - November 2019
2019 நவெம்பரில் தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் விரிவடைந்து 56.0 சுட்டெண் பெறுமதியொன்றினை பதிவுசெய்தமைக்கு புதிய கட்டளைகள்இ உற்பத்தி மற்றும் தொழில்நிலையில் ஏற்பட்ட விரிவாக்கமே முக்கிய காரணமாக அமைந்தது.
அனைத்து துணைச் சுட்டெண்களும் விரிவாக்கமொன்றினை எடுத்துக்காட்டிய போதும்இ 2019 ஒத்தோபருடன் ஒப்பிடுகையில் அவை மெதுவான வேகத்திலேயே காணப்பட்டன. புதிய கட்டளைகளும் உற்பத்தியும் மெதுவான வேகத்தில் விரிவடைந்தமைக்கு புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் தயாரிப்பில் காணப்பட்ட மெதுவான தன்மை முக்கிய காரணமாக அமைந்தது. இவ்வபிவிருத்திகளுடன் இசைந்துசெல்லும் விதத்தில் தொழில்நிலையும் சிறிதளவால் வீழ்ச்சியடைந்தது.
-
External Sector Performance - October 2019
இறக்குமதிகள் மீதான செலவினத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் ஏற்றுமதிகளிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட சிறிதளவு வீழ்ச்சி என்பனவற்றின் காரணமாக 2019 ஒத்தோபரில் வர்த்தகப் பற்றாக்குறை (ஆண்டிற்கு ஆண்டு) சுருக்கமடைந்தது. இறக்குமதிகள் மீதான ஒன்றுசேர்ந்த செலவினத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சி மற்றும் ஏற்றுமதிகளிலிருந்தான ஒன்றுசேர்ந்த வருவாய்களில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பனவற்றின் விளைவாக 2019இன் முதல் பத்து மாத காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறை 2018இன் தொடர்பான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் சுருக்கமடைந்தது. அதேவேளை, சுற்றுலாப் பயணிகளின் வருகைகளில் காணப்பட்ட வீழ்ச்சி 2019 ஒத்தோபரில் மேலும் கட்டுப்படுத்தப்பட்டது. தொழிலாளர் பணவனுப்பல்களில் ஒன்றுசேர்ந்த வீழ்ச்சி பதிவுசெய்யப்பட்ட போதும் 2019 ஒத்தோபரில் (ஆண்டிற்கு ஆண்டு) மேம்பட்டது. நிதியியல் கணக்கில், கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையில் வெளிநாட்டு முதலீடுகள் தேறிய வெளிப்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த வேளையில் அரச பிணையங்கள் சந்தை 2019 ஒத்தோபரில் சிறிதளவு தேறிய உட்பாய்ச்சலைத் தோற்றுவித்தது. ஒத்தோபர் மாத காலப்பகுதியில் செலாவணி வீதம் கலப்பு அசைவொன்றினைப் பதிவுசெய்ததுடன் இவ்வாண்டுப்பகுதியில் ஐ.அ.டொலருக்கெதிராகத் தொடர்ந்தும் உயர்வடைந்தது.
-
Central Bank of Sri Lanka holds its 12th International Research Conference
இலங்கை மத்திய வங்கி அதன் மாபெரும் வருடாந்த நிகழ்வான 12ஆவது பன்னாட்டு ஆராய்ச்சி மாநாட்டினை ஜோன் எக்ஸ்ரர் பன்னாட்டு மாநாட்டு மண்டபத்தில் 2019 திசெம்பர் 09ஆம் திகதி நடத்தியது. மாநாடானது சமகால பேரண்டப் பொருளாதாரக் கொள்கை தொடர்பான கோட்பாட்டு ரீதியான மற்றும் அனுபவ ரீதியான ஆராய்ச்சியினை ஊக்குவிப்பதனையும் பல்லினத் தன்மை கொண்ட பின்புலத்திலிருந்து வருகை தருகின்ற ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களது பார்வை, கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் அனுபவங்களைப் பல்வேறுபட்ட கோணங்களிலிருந்து ஆராய்வதற்கான தளமொன்றினை வழங்குவதனையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.
-
Public Awareness on Moneylending Activities
அச்சு, இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் உட்பட பல்வேறுபட்ட வழிமுறைகளினூடாக கடன் வழங்கல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற விளம்பரங்கள் மற்றும் தொடர்பூட்டல் வடிவங்கள் பற்றி இலங்கை மத்திய வங்கி அவதானித்திருக்கிறது. இது தொடர்பாக, குறிப்பிட்ட ஒழுங்கீனங்கள் தொடர்பில் முறைப்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன. சில குற்றச்சாட்டுக்கள் கடன் வழங்குநர் தொடர்பான மோசடிகள் தொடர்பானவையாகக் காணப்படுகின்ற வேளையில், சில உயர் வட்டி வீதங்கள் தொடர்பான முறைப்பாடுகளாகவும், வாடிக்கையாளர்களுக்கான தொந்தரவு தொடர்பானவையாகவும் மற்றும் வாடிக்கையாளர் தகவல் தொடர்பான இரகசியத்தன்மைகளை தவறாகப் பயன்படுத்துகின்றமை தொடர்பாகவும் காணப்படுகின்றன.
-
Mobilization of Funds from the Public by Issuing Various Instruments
குறிப்பிட்ட தனிப்பட்டவர்களும் நிறுவனங்களும் பல்வேறுபட்ட சாதனங்களை வழங்குவதன் மூலம் பொதுமக்களிடமிருந்து நிதிகளைத் திரட்டி வருவது பற்றி அவதானிக்கப்பட்டிருக்கிறது. வாக்குறுதிச் சான்றிதழ்கள், வர்த்தகப் பத்திரங்கள் மற்றும் தொகுதிக்கடன்கள் என்பன அவற்றுள் சிலவாகும். குறிப்பிட்ட வகையான நிறுவனங்கள் அவற்றின் நிதியியல் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யும் பொருட்டு மேலே குறிப்பிடப்பட்ட சாதனங்களை வழங்குவதன் மூலம் நிதிகளைத் திரட்டி வருவதனைக் குறிப்பிடுதல் வேண்டும். இச்சாதனங்கள் வருவாயை ஈட்டும் நியதிகளில் கவர்ச்சிகரமானவையாக இருக்கின்ற போதிலும், தனிப்பட்டவர்கள் அவர்களின் நோக்கங்களுக்காக அத்தகைய நிதிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய தன்மைகள் பற்றி உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
-
Cancellation of the License Issued to Lankaputhra Development Bank Limited
2016ஆம் ஆண்டின் அரச வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதற்கிணங்க, லங்காபுத்திர டெவலப்மென்ற் பாங்க் லிமிடெட் இனை பிரதேசிய சங்வர்த்தன பாங்க் உடன் இணைக்கும் நடவடிக்கைகள் முடிவடைந்ததுடன், 1988ஆம் ஆண்டு 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் (திருத்தியடைக்கப்பட்ட) 76 எவ் 9(9) பிரிவில் வழங்கப்பட்டுள்ள சரத்துக்களின் பிரகாரம் லங்காபுத்திர டெவலப்மென்ற் பாங்க் லிமிடெட் இற்கு வழங்கப்பட்டிருந்த உரிமத்தினை 01 ஏப்பிறல் 2019 இலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில் இரத்துச் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை அனுமதி வழங்கியிருக்கின்றது.
-
Revoking of the Suspension of Business of Natwealth Securities Limited
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2009ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் (முதனிலை வணிகர்கள்) ஒழுங்குவிதிகள் மற்றும் 2009ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் (முதனிலை வணிகர்கள்) ஒழுங்குவிதிகள் என்பனவற்றின் நியதிகளுக்கமைய செயற்பட்டு, 2019.11.30ஆம் திகதி பி.ப 4.30 மணியிலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் நட்வெல்த் செக்குறிட்டீஸ் லிமிடெட் அதன் வியாபாரத்தினை மற்றும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து இடைநிறுத்தி வைத்தலை இரத்துச்செய்ய தீர்மானித்துள்ளது.
-
Monetary Policy Review - No. 7 of 2019
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2019 நவெம்பர் 28ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் அவற்றின் தற்போதைய மட்டமான முறையே 7.00 சதவீதத்திலும் 8.00 சதவீதத்திலும் தொடர்ந்தும் பேணுவதன் மூலம் அதன் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கையினைப் பேணுவதற்குத் தீர்மானித்திருக்கிறது. சபையானது, உள்நாட்டுப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் சந்தைகள் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரம் என்பனவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்திகள் என்பனவற்றை மிகக் கவனமாக ஆராய்ந்ததனைத் தொடர்ந்து இத்தீர்மானத்திற்கு வந்திருக்கிறது. நாணயச் சபையின் தீர்மானமானது, பணவீக்கத்தினை விரும்பத்தக்க மட்டமான 4-6 சதவீத வீச்சில் பேணுகின்ற வேளையில் பொருளாதாரம் நடுத்தர காலத்தில் அதன் உள்ளார்ந்த வளர்ச்சியை அடைவதற்கு உதவும் நோக்குடன் இசைந்து செல்வதாகக் காணப்படுகிறது.
-
Regulatory Actions taken by the Central Bank of Sri Lanka on The Finance Company PLC
த பினான்ஸ் கம்பனி பிஎல்சி மீது இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் சம்பந்தமாக 2019 நவெம்பர் 26ஆம் திகதி அன்று செய்தித்தாள் மற்றும் செய்தி வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட சில தகவல்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் கவனம் ஈர்க்கப்பட்டதுடன் இலங்கை மத்திய வங்கி பின்வருவனவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறது.