இலங்கை மத்திய வங்கி நிதி அமைச்சு மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் என்பவற்றுடன் இணைந்து ‘இலங்கையின் மீட்சிக்கான பாதை: படுகடன் மற்றும் ஆளுகை’ குறித்து 2025 யூன் 16 அன்று கொழும்பு சங்ரி லா ஹோட்டலில் நடைபெற்ற உயர் மட்டத்திலான மாநாட்டிற்கு இணை அனுசரணை வழங்கியது. பன்னாட்டு நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்பட்ட மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழான இலங்கையின் மீட்சி குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கும் பொருட்டு முக்கிய கொள்கை வகுப்பாளர்கள், உலகளாவிய ஆர்வலர்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரினை நிகழ்வு ஒன்றிணைத்தது.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க அவர்களினால் நிகழ்த்தப்பட்ட வரவேற்பு உரையுடன் மாநாட்டு நடவடிக்கைகள் ஆரம்பித்ததனைத் தொடர்ந்து, இலங்கையின் சனாதிபதி கௌரவ அநுர குமார திசாநாயக்க அவர்கள் தொடக்க உரையினை ஆற்றினார். பன்னாட்டு நாணய நிதியத்தின் முதல் துணை முகாமைத்துவப் பணிப்பாளர் முனைவர் கீதா கோபிநாத் நிகழ்வின் கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டதுடன் பன்னாட்டு நாணய நிதியத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தி தொடக்க உரையினை நிகழ்த்தினார்.
Published Date:
Thursday, June 19, 2025