இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தை மையப்படுத்தி இலங்கையின் நிதியியல் துறை பாதுகாப்பு வலையின் நிதிசார் மற்றும் நிறுவனசார் இயலளவை வலுப்படுத்துவதற்கு இலங்கை நிதியியல் துறை பாதுகாப்பு வலை வலுப்படுத்தல் கருத்திட்டத்தின் கீழ் ஐ.அ.டொலர் 150 மில்லியனை வழங்க உலக வங்கி நிறைவேற்றுச் சபை அனுமதியளித்துள்ளது. உலக வங்கி, 2023 நவெம்பர் 09 அன்று பின்வரும் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
வொஷிங்டன், 2023 நவெம்பர் 09 – நிதியியல் துறை தாக்குப்பிடிக்கும் தன்மையினை வலுப்படுத்துவதற்கு இலங்கைக்கு ஐ.அ.டொலர் 150 மில்லியனை வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இன்று அனுமதியளித்தது.