ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி என்பன தொடர்பில் 2018.01.02ஆம் திகதியிடப்பட்ட பத்திரிகை வெளியீட்டிற்கு மேலதிகமானது.
வைப்பாளர்களின் கோரிக்கையினைப் பரிசீலனையில் கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வைப்புப் பொறுப்புக்களின் 10 சதவீதத்தினை 2018.07.10ஆம் திகதி தொடக்கம் உடனடியாகக் கொடுப்பனவு செய்யுமாறு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி இற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.









2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில் இலங்கை நிதியியல் உளவறில் பிரிவு பிணையங்கள் துறையில் பணம் தூயதாக்கலுக்கெதிரான பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தலை முக்கிய கவனத்தில் கொண்டு அனைத்தையுமுள்ளடக்கிய இடர்நேர்வின் அடிப்படையிலும் மேற்பார்வையின் அடிப்படையிலும் கண்டறியப்பட்டவை தொடர்பான தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான கட்டமைப்பொன்றினை உருவாக்குவதற்காக இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை 2018 யூன் 19ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியில் மேற்கொண்டது.