• Views of the Central Bank of Sri Lanka on the National Payment Platform

    'டோடல் பே மற்றும் ஐசிரிஏ" தொடர்பில் சுற்றோட்டத்தில் விடப்பட்ட செய்திக் கடடு;ரைகளுக்கு பதிலிறுத்தும் விதத்தில், தேசிய கொடுப்பனவுத் தளம் மறுசீரமைப்பது தொடர்பிலான தற்போதைய நிலைமைகளின் முழுமையான விளக்கத்தினை வழங்கும் நோக்குடன் நிகழ்வுகளின் உண்மைத் தன்மையினை வழங்குவதற்கும் பொதுமக்களை தெளிவுபடுத்தவதற்கு இலங்கை மத்திய வங்கி விரும்புகின்றது.  

  • Regulatory Action on a Primary Dealer - Pan Asia Banking Corporation PLC

    பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கடட்ளைச்சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கடட் ளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, 2017 ஓகத்து 14ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை, 2017 ஓகத்து 15ஆம் திகதி மு.ப. 10.00 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பான் ஏசியா பாங்கிங் கேப்பிரசேன் பிஎல்சி முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து ஆறு மாத காலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது. 

  • Concessions on Loans Granted to Flood Affected Borrowers

    அண்மைய வெள்ளம், மோசமான வானிலை நிலைமைகள் மற்றும் அதனுடன் இணைந்த சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்கள் அவர்களின் வியாபாரங்களை மீளத்தொடங்குவதையும் அவர்களின் வழமையான நடவடிக்கைகளுக்குத் திரும்புவதையும் வசதிப்படுத்தும் நோக்குடன், உரிமம் பெற்ற வங்கிகள் அவற்றின் அத்தகைய பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்குச் சலுகைகளை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி அனுமதித்துள்ளது. 

    இதன்படி, உரிமம் பெற்ற வங்கிகள்;

  • The Financial Intelligence Unit-Sri Lanka enters into Memorandum of Understanding with the Financial Intelligence Unit of the Kingdom of Bhutan and China AML Monitoring and Analysis Centre

    இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவு, பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கெதிரான புலனாய்வுகளையும் வழங்குகள் தொடர்வதற்கான நடவடிக்கைளையும் வசதிப்படுத்தி நிதியியல் தகவல்களைப் பகிர்நதுகொள்ளும் பொருட்டு 2017 யூலை 17 - 21 காலப்பகுதியில் கொழும்பில் நடைபெற்ற பணம் தூயதாக்கல் மீதான ஆசிய பசுபிக் குழுமத்தின் 20 ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பூட்டான் இராச்சியத்தின் நிதியியல் உளவறிதல் பிரிவு மற்றும் சனீhவின் பணம் தூயதாகக்லைத் தடுப்பதற்கான கணக்hணிப்பு மற்றும் பகுப்பாய்வு நிலையம் போன்றவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்திருக்கிறது.  

  • Monetary Policy Review - No. 5 of 2017

    The Monetary Board, at its meeting held on 02 August 2017, was of the view that the current monetary policy stance is appropriate and decided to maintain the policy interest rates of the Central Bank of Sri Lanka at their present levels.

    In arriving at the above decision, the Monetary Board took into consideration current and expected developments in the domestic and international macroeconomic environment and the need to maintain inflation at mid-single digit levels over the medium term.

  • 20th Annual Meeting of the Asia/Pacific Group on Money Laundering, Colombo, Sri Lanka, July 15-21, 2017

    இலங்கை, பணம் தூயதாக்கல் மீதான ஆசிய/ பசுபிக் குழுமத்தின் 20 ஆவது ஆண்டுக் கூட்டத்தினை ஆசிய பசுபிக் குழுமத்தின் 41 உறுப்பு நாடுகளிலிருந்தான 408 பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு பன்னாட்டு அவதானிப்பாளர் நிறுவனங்களிலிருந்தான 24 அவதானிப்பாளர்கள் ஆகியோரின் பங்குபறற் லுடன் 2017 யூலை 15 - 21 வரை கொழும்பில் நடாத்தியிருந்தது. இந்த நிகழ்விற்கு அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர். 

  • External Sector Performance – May 2017

    நாட்டிற்கான 11ஆவது பன்னாட்டு முறி வழங்கல்களிலிருந்தான வருவாய்கள் மற்றும் 2017 மேயில் கிடைக்கப்பெற்ற குழுநிலைக் கடன் வசதி போன்றவற்றின் மூலம் சென்மதி நிலுவையின் நிதியியல் கணக்கிற்கான குறிப்பிடத்தக்க உட்பாய்ச்சல்களால் இலங்கையின் வெளிநாட்டுத் துறை வலுவடைந்தது. இவ் உட்பாய்ச்சல்கள், 2017 ஏப்பிறல் இறுதியில் ஐ.அ.டொலர் 5.0 பில்லியனாகக் காணப்பட்ட மொத்த அலுவல்சார் ஒதுக்குகளினை 2017 ஏப்பிறல் இறுதியில் ஐ.அ.டொலர் 6.8 பில்லியனானதொரு அதிகரிப்பினை தோற்றுவித்தது. இலங்கை பொருளாதாரத்தின் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையானது அரச பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை போன்றவற்றின் தொடர்ச்சியான உட்பாய்ச்சல்கள் மூலம் தொடர்ந்தும் மிதப்பாகக் காணப்பட்டது.

  • New Primary Issuance System for Treasury Bonds

    இலங்கை மத்திய வங்கியானது திறைசேரி முறிகளுக்கான புதிய முதனிலை வழங்கல் முறையொன்றினை அறிமுகப்படுத்தவுள்ளது. 2017 யூலை 27 இலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில், 2015 பெப்புருவரியிலிருந்து நடைமுறையில் காணப்படும் திறைசேரி முறிகளுக்கான முழுமையான ஏல அடிப்படையிலான வழங்கல் முறைமைக்கு பதிலாக இந்த புதிய முறைமை மாற்றியமைக்கப்படுகின்றது. புதிய முறைமையினை அறிமுகப்படுத்துவதற்கான பிரதான காரணமானது அரசாங்கத்தின் உள்நாட்டு கடன்பாடுகளின் போது வினைத்திறனையும் வெளிப்படைத் தன்மையினையும ;மேலும் அதிகரிப்பதாகும். 

  • Statement Issued by the Central Bank of Sri Lanka on the Leakage of Customer Information by Hatton National Bank PLC

    இலங்கை மத்திய வங்கியினால் ஆரம்ப விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும், தற்போது கிடைக்கத்தக்கதாகவுள்ள தகவல்களின்படி, 4,630 வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட சில வங்கித்தொழில் தகவல்களுடன் தொடர்புடைய இச்சம்பவமானது கவனக் குறைவினால் ஏற்பட்டதாகவே தோன்றுகின்றது என்றும் இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறியத்தர விரும்புகின்றது. மேலும், இச்சம்பவத்திற்கு ஹற்றன் நஷனல் வங்கிக்குள் வாடிக்கையாளர் தகவல்களை முகாமை செய்வதிலும் பயன்படுத்துவதிலும் காணப்படும் உள்ளகக் குறைபாடுகளே காரணமென அவதானிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இவ்விடயமானது, ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி இரண்டினாலும் மேலதிக விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. 

  • Inflation in June 2017

    தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் (2013=100) ஏற்பட்ட மாற்றங்களினால் அளவிடப்பட்டவாறான பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் 2017 மேயின் 7.1 சதவீதத்திலிருந்து 2017 யூனில் 6.3 சதவீதத்திற்கு குறைவடைந்தது. 2017 யூனில் ஆண்டிற்கு ஆண்டு பணவீக்கம் அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகை இரண்டும் முக்கியமாகப் பங்களித்தன.

    ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2017 யூனிலும் முன்னைய மாதத்தில் காணப்பட்ட அதே மட்டமான 6.1 சதவீதத்தில் மாறாது காணப்பட்டது. 

Pages