இலங்கையின் நிதியியல் உளவறிதல் பிரிவானது இலங்கை கூட்டுறுதி தொடர்மாடிமனை அதிகாரசபை மற்றும் தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகாரசபை என்பனவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருக்கிறது

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், கூட்டுறுதி தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் மற்றும் இலங்கையிலுள்ள உரிமம்பெற்ற இரத்தினக்கல் மற்றும் ஆபரண வணிகர்கள் தொடர்பில் பணம் தூயதாக்கலைத் தடுத்தல்/ பயங்கரவாததத்திற்கு நிதியளித்தலை ஒழித்தல் பற்றிய சட்ட ரீதியான கடப்பாடுகள் காத்திரமான விதத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்தும் விதத்தில் கூட்டுறுதி தொடர்மாடிமனை முகாமைத்துவ அதிகாரசபையிடமிருந்தும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையிடமிருந்தும் நிதியியல் உளவறிதல் பிரிவு எதிர்பார்க்கின்றவாறு தகவல்களை வழங்குதல் மற்றும் ஆதரவுத் தன்மையினை வரைவிலக்கணப்படுத்துவது தொடர்பான செயன்முறைகளை மேலோட்டமாக அவற்றிற்குத் தெரிவிக்கும் விதத்தில் இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது இலங்கை தொடர்மாடிமனை முகாமைத்துவ அதிகாரசபையுடனும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையுடனும் 2019 ஓகத்து 28ஆம் நாளன்று இலங்கை மத்திய வங்கியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துகொண்டது.

நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் திரு. டி. எம். ரூபசிங்க அவர்களும் கூட்டுறுதி தொடர்மாடிமனை முகாமைத்துவ அதிகாரசபையின் தலைவர் திரு. சி. ஏ. விஜயவீர அவர்களும்  தொடர்பான நிறுவனங்கள் சார்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்குகெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல் என்பனவற்றிற்கான தேசிய இணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர். இந்திரஜித் குமாரசுவாமியின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். அத்துடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின்  மேலதிகச் செயலாளரும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் பணிப்பாளர்சபை உறுப்பினருமான திரு. கே. டி. சித்திரபாலா மற்றும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திரு. துலிப் சோமிரத்ன அவர்களும் நிதியியல் உளவறிதல் பிரிவிற்கும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொள்வதற்காக சமூகமளித்திருந்தனர். 

முழுவடிவம்

Published Date: 

Tuesday, September 3, 2019