முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய நிதியியல் பணிகள் மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் அதிகாரமளிக்கப்படாத வைப்புக்களை ஏற்கும் மற்றும் பிரமிட் திட்டங்கள் மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள்

பொலன்னறுவை மாவட்டத்திலுள்ள அரச அலுவலர்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரம் பிரதேச அலவலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட  'முறைசார்ந்த நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தாங்கக்கூடிய  நிதியியல் பணிகள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சிதிட்டமொன்றும் 'அதிகாரமளிக்கப்படாத வைப்புக்களை ஏற்கின்ற மற்றும் பிரமிட் திட்டங்கள்" மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களும் இலங்கை மத்திய வங்கியின் அனுராதபுரம் பிரதேச அலுவலகத்தினால் பொலன்னறுவை பிரதேச செயலகத்தில் 2019 மாச்சு 07ஆம் நாள் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.