2015ஆம் ஆண்டிற்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினது அறுபத்தாறாவது ஆண்டறிக்கை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அர்ஜுன மகேந்திரன் அவர்களால் மேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடமும் பிரதம மந்திரி மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க அவர்களிடமும் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க இலங்கை நாணய விதிச் சட்டத்தின் 35ஆம் பிரிவின் நியதிகளின் பிரகாரம் கௌரவ நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்களிடமும் சமர்ப்பிக்கப்பட்டது.

(இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அர்ஜுன மகேந்திரன் அவர்கள் 2015 ஆண்டிற்குரிய ஆண்டறிக்கையினை மேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடமும் பிரதமரும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்களிடமும் கௌரவ நிதி அமைச்சர், ரவி கருணாநாயக்க அவர்களிடமும் கையளிப்பதையும் மத்திய வங்கியின் துணை ஆளுநர்களான முனைவர் பி நந்தலால் வீரசிங்க மற்றும் திரு. எஸ் லங்காதிலக, மத்திய வங்கியின் உதவி ஆளுநரான திரு. கே. டி. ரணசிங்க மற்றும் மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தின் பணிப்பாளரான திரு. மகிந்த சிறிவர்த்தன ஆகியோர் அருகில் நிற்பதனையும் படத்தில் காணலாம்)

 

முழுவடிவம்

Published Date: 

Tuesday, April 26, 2016