சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வைப்பு உடமையாளர்களுக்கான கொடுப்பனவு

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி என்பன தொடர்பில் 2018.01.02ஆம் திகதியிடப்பட்ட பத்திரிகை வெளியீட்டிற்கு மேலதிகமானது. 

வைப்பாளர்களின் கோரிக்கையினைப் பரிசீலனையில் கொண்டு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வைப்புப் பொறுப்புக்களின் 10 சதவீதத்தினை 2018.07.10ஆம் திகதி தொடக்கம் உடனடியாகக் கொடுப்பனவு செய்யுமாறு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி இற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

கொடுப்பனவுத் திட்டத்தின் விபரங்கள் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியினால் வைப்பாளர்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும். இலங்கை மத்திய வங்கியானது கடந்த ஆறு மாதங்களின் போது தொடர்புடைய அனைத்துத் தரப்பினரால் வழங்கப்பட்ட உதவிக்காக நன்றி கூறுகின்ற அதேவேளை சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் தொழில் நடவடிக்கைகள் மீள்கட்டமைப்புச் செய்யப்படும் வரை பொறுமையாக இருக்குமாறும் அத்தகைய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட முகாமைத்துவக் குழுவுடன் ஒத்துழைக்குமாறும் அனைத்து வைப்பாளர்களையும் கோருகின்றது. இது தொடர்பிலான மேலதிகத் தகவல்கள் உரிய காலத்தில் தொடர்பூட்டல் செய்யப்படும்.  

 

Published Date: 

Tuesday, July 10, 2018