இலங்கையின் நிதி உளவறிதல் பிரிவு இலங்கைப் பொலிசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினைச் செய்திருக்கின்றது

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிக் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளினது நியதிகளில், இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவானது பணம் தூயதாக்கல், பயங்கரவாதத்திற்கு நிதியிடல் மற்றும் ஏனைய தொடர்புடைய குற்றங்கள் மீதான புலனாய்வுகளையும் வழக்குத் தொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் வசதிப்படுத்தும் பொருட்டு தகவல்களைஃ உளவறிதல்களை பகிர்ந்து கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கியில் 2017 திசெம்பர் 13ஆம் நாளன்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றினை இலங்கைக் பொலிசுடன் செய்திருக்கின்றது.

பொலிஸ்மா அதிபர் திரு. பூஜித ஜயசுந்தர அவர்களும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் முனைவர் எச். அமரதுங்க அவர்களும் தொடர்பான திணைக்களங்களின் சார்பில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரும் பணம் தூயதாக்கலுக்கு எதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல்  என்பனவற்றிற்கான தேசிய இணைப்புக் குழுவின் தலைவருமான முனைவர் இந்திரஜித் குமாரசுவாமியின் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

பணம் தூயதாக்கலும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலும் பன்னாட்டு ரீதியில் தொடர்புபட்ட நிதியியல் குற்றங்களாவதுடன் இவை உள்நாட்டு அதேபோன்று உலகளாவியப் பொருளாதாரம் மற்றும் நிதியியல் முறைமைகளின் உறுதிப்பாட்டிற்கும் அச்சுறுத்தலாக விளங்கக்கூடும். அத்தகைய குற்றங்களை தடுத்தல், கண்டுபிடித்தல் மற்றும் வழக்குத் தொடுத்தல் போன்றவற்றிற்கு மிக முக்கியமாக விளங்குகின்ற உளவறிதல்கள் மற்றும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதனை இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் இயலச்செய்யும்.

நிதியியல் உளவறிதல் பிரிவானது இலங்கைச் சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் ஆட்பதிவுத் திணைக்களம் ஆகியவற்றுடன் இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்கனவே கைச்சாத்திட்டுள்ள வேளையில், மேற்குறிப்பிடப்பட்ட நோக்கத்திற்காக வேறு பல தொடர்பான உள்நாட்டு அரச முகவர்களுடனும் விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையொப்பமிடுவதற்கான ஒழுங்குகள் மேற்கொண்டு வருகின்றது.

Published Date: 

Friday, December 15, 2017