இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டுநிறைவை நினைவுகூரும் வகையில் ரூ. 2000 சுற்றோட்டத்திற்கு விடப்படும் ஞாபகார்த்த நாணயத்தாள் பற்றிய பொதுமக்கள் விழிப்புணர்வு

இலங்கை மத்திய வங்கி அதன்  75ஆவது ஆண்டுநிறைவை முன்னிட்டு 2025 ஓகத்து 29 அன்று ரூ. 2000 சுற்றோட்டத்திற்கு விடப்படும் ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டுள்ளது.

புதிய நாணயத்தாளை தங்குதடையின்றி ஏற்றுக்கொள்வதையும் விநியோகிப்பதையும் வசதிப்படுத்தும் பொருட்டு,  உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் அவற்றின் பணம் கையாளும் இயந்திரங்களை அளவமைக்கும் செயன்முறையை முன்னெடுக்கின்றன. இச்செயன்முறையின் முன்னேற்றத்துக்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் ஊடாக படிப்படியாக சுற்றோட்டத்திற்கு விடப்படும். 

முழுவடிவம்

Published Date: 

Monday, September 15, 2025