இலங்கையில் நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் பற்றிய தகவல் ஏட்டை மத்திய வங்கி வெளியிடுகின்றது

இலங்கையில் நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலில் மத்திய வங்கியின் வகிபாகம் பற்றி பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் “இலங்கையில் நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்” என்ற தலைப்பில் தகவல் ஏடொன்றினை மத்திய வங்கி மூன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளது. மத்திய வங்கியின் பரந்தளவிலான தொடர்பூட்டல் உபாயத்தின் பாகமொன்றாக இவ்வெளியீடு, நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தல் பற்றிய தொழில்நுட்ப நோக்குகள் மீது எளிமையான கலந்துரையாடலை எடுத்துரைத்து பல்வேறு பின்னணியைக் கொண்ட தனிப்பட்டவர்களும் அதனைப் பெற்றுக்கொள்வதை இயலச்செய்து, நாணயக் கொள்கை வகுத்தல், நடைமுறைப்படுத்தல், நாணயச் சாதனங்கள் மற்றும் ஊடுகடத்தல் பொறிமுறை பற்றிய பெறுமதிமிக்க உள்நோக்குகளை வழங்குகின்ற அதேவேளை பொதுமக்கள் மத்தியில் நாணயத் தொழிற்பாடுகள் மீதான ஏதேனும் தவறான எண்ணப்பாங்குகளை இல்லாதொழிப்பதற்கு உதவுகின்றது.   

இலங்கையின் பின்னணியில் திரவத்தன்மை முகாமைத்துவம் மற்றும் கொள்கைச் சாதனங்களை தொழிற்படுத்துதல் அத்துடன் நாணய ஊடுகடத்தல் பொறிமுறை என்பன ஊடாக மத்திய வங்கியின் குறிக்கோள்களை அடைதல், நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தல் என்பவற்றில் நாணயக் கொள்கையின் வகிபாகம் பற்றிய கலந்துரையாடலொன்றை தகவல் ஏடு உள்ளடக்குகின்றது. இதன் பின்னணியில், இவ்வெளியீடானது இலங்கையில் நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தலில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயன்மிக்கதாகவும் நம்பகமான உசாத்துணை மூலமாகவும் அமைந்திருக்கும்.   

தகவல் ஏடு இலத்திரனியல் வடிவத்தில் கிடைக்கப்பெறுவதுடன் மத்திய வங்கியின் வலைத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். https://www.cbsl.gov.lk/ta/வெளியீடுகள்/ஏனைய-வெளியீடுகள்/பொதுமக்கள்-விழிப்புணர்வு

முழுவடிவம்

Published Date: 

Monday, July 10, 2023