இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு. எச். பீ. திசநாயக்கா காலமாகிவிட்டார்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு. எச். பீ. திசநாயக்கா காலமாகிவிட்டார் என்பதனை நாம் ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகிறோம்.

அவர் 2023 மாச்சு 05ஆம் திகதி அவரது 85 ஆவது வயதில் மறைந்தார்.

திரு. திசநாயக்கா இலங்கை மத்திய வங்கியின் 9 ஆவது ஆளுநராக 1992 யூலை 01 இலிருந்து 1995 நவெம்பர் 15ஆம் திகதி வரை தொழிற்பட்டார். ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர் அவர், சுங்கத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் இலங்கை மத்திய வங்கியிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் 1995 இலிருந்து 1998 வரையான காலப்பகுதியில் பன்னாட்டு நாணய நிதியத்தின் மாற்று நிறைவேற்றுப் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.

திரு. எச். பீ. திசநாயக்காவின் பூதவுடல் அவரது இல்லத்தில் (இல.2/84, மிஹிரி உயன, பழைய கொட்டாவ வீதி, மிறிகன, நுகேகொட) 07 மாச்சு (இன்று) பி.ப 1.00 மணி வரை வைக்கப்படுவதுடன் தகனக்கிரிகைகள் மிறிகன பொதுமயானத்தில் இடம்பெறும்.

Published Date: 

Tuesday, March 7, 2023