2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் 19(2)ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 19(1)ஆம் பிரிவின் கீழ் உரித்தளிக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக்கொண்டு, நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுகாத நிறுவனங்கள் மீது நிதியியல் தண்டப்பணங்கள் விதிக்கப்படுகின்றன. நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் பிரகாரம், நிறுவனங்களின் தொடர்புடைய இணங்கியொழுகாமையின் தன்மை மற்றும் பாரதூரம் என்பனவற்றினைப் பரிசீலனையிற்கொண்டு தண்டப்பணங்கள் விதித்துரைக்கப்படலாம்.
அதற்கமைய, பணம் தூயதாக்குதலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை ஒழித்தலுக்கான இலங்கையின் ஒழுங்குமுறைப்படுத்துநர் என்ற ரீதியில் நிதியியல் உளவறிதல் பிரிவானது நிறுவனங்களின் இணங்குவிப்பினை நடைமுறைப்படுத்துவதற்கு 2025 ஒத்தோபர் தொடக்கம் 2026 மாச்சு வரையான காலப்பகுதியில் கீழே குறித்துக்காட்டப்பட்டவாறு மொத்தமாக பதினான்கு மில்லியன் அறுநூறு ஆயிரம் ரூபா (ரூ.14,600,000) கொண்ட தொகையினைத் தண்டப்பணமாகச் சேகரித்தது. தண்டப்பணங்களாகச் சேகரிக்கப்பட்ட பணமானது திரட்டு நிதியத்திற்கு வரவுவைக்கப்பட்டது.








