இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்கள் 2017 மே 09ஆம் திகதி நடைபெற்ற பத்திரிகை மாநாட்டில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் பிழையாக வழிநடத்தும் செய்தி அறிக்கைகள் பற்றி மத்திய வங்கி, தங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறது. இச்செய்தித்தாள் அறிக்கைகள் ஊழியர் சேம நிதியத் திணைக்களத்திற்குப் பொறுப்பான உதவி ஆளுநரும் அலுவலர்களும் ஒழுங்கீனமான கொடுக்கல்வாங்கல்களூடாக ஊழியர் சேம நிதியத்திற்கு இழப்புக்களை ஏற்படுத்திய அவர்களின் வகிபாகத்திற்காக மாற்றல் செய்யப்பட்டிருக்கின்றனர் என ஆளுநர் தெரிவித்ததாகக் குறிப்பிட்டு உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை வெளியிட்டிருக்கின்றன.
ஆகவே, இலங்கை மத்திய வங்கி, பிழையான செய்தி அறிக்கைகளில் உள்ளடக்கப்பட்டிருந்த பிழையான தகவல்களைத் தெளிவுபடுத்துவதற்காக பின்வரும் விடயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகின்றது.