இலங்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோருடனான சந்திப்பு தொடர்பில் பன்னாட்டு நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டின் லாகார்டே அவர்களின் அறிக்கை

பன்னாட்டு நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டீன் லாகார்டே இலங்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோரை இன்று சந்தித்தார்.

சந்திப்பின் பின்னர் திருமதி லாகார்டே பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்:

“அமைச்சர் சமரவீர மற்றும் ஆளுநர் குமாரசுவாமி ஆகியோரை இன்று பகல் சந்தித்தையிட்டு நான் மிகழ்ச்சியடைகிறேன். சவால்மிகுந்த பொருளாதாரச் சூழ்நிலைகள் மற்றும் நாட்டுக்கான கொள்கை முன்னுரிமைகள் தொடர்பாக நாம் கலந்துரையாடினோம். பன்னாட்டு நாணய நிதியத்தினால் உதவி வழங்கப்படும் பொருளாதாரச் சீர்திருத்த நிகழ்ச்சிநிரலுக்கு இலங்கையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

“நிகழ்ச்சிநிரலை காத்திரமாக நடைமுறைப்படுத்துவதுடன் கூடிய உறுதியான கொள்கைக் கலப்பானது நம்பிக்கையைப் பலப்படுத்துகின்ற அதேவேளை அதன் மக்களுக்குப் பயனளிக்கும் நிலைபெறத்தக்க, உயர்வான வளர்ச்சிப் பாதையில் இலங்கையினை நிலைநிறுத்துவதற்கு முக்கியமானதாக விளங்குகிறது. 

“இம்முயற்சிகள் சம்பந்தமாக இலங்கை அதிகாரிகளுக்கு ஆதரவளிப்பதற்கு பன்னாட்டு நாணய நிதியம் தயாராகவிருப்பதுடன், பெப்புருவரி மாத நடுப்பகுதியில் நிகழ்ச்சிதிட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்காக பன்னாட்டு நாணய நிதியக் குழுவொன்று கொழும்பு வரவுள்ளது.”

 

 

பன்னாட்டு நாணய நிதிய பத்திரிகை வெளியீடு இல. 19/04 

பன்னாட்டு நாணய நிதியத்தின் தொடர்பூட்டல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது

https://www.imf.org/en/News/Articles/2019/01/15/pr1904-stmnt-christine-lagarde-meet-sri-lanka-fin-min-mangala-samaraweera-gov-indrajit-coomaraswamy

 

 

 

 

 

Published Date: 

Wednesday, January 16, 2019