இலங்கை அதன் தேசிய அட்டைத் திட்டத்தினை ஆரம்பித்திருக்கிறது

இலங்கை மத்திய வங்கி லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிடெட்டுடன் இணைந்து தேசிய அட்டைத் திட்டத்தினை ஆரம்பித்ததன் மூலம் நாட்டின் கொடுப்பனவுத் தோற்றப்பாட்டில் குறிப்பிடத்தக்க மைல் கல்லொன்றினை அடைந்திருக்கிறது. தேசிய அட்டைத் திட்டமானது, பன்னாட்டு கொடுப்பனவு அட்டைத் தொழிற்பாட்டாளரான ஜேசிபி யப்பான் இன்ரநஷனலின் பங்கேற்புடன் லங்கா கிளியர் (பிறைவேட்) லிமிட்டெட்டினால் தொழிற்படுத்தப்படும். ஆரம்பத்தில், இவ்வட்டைத் திட்டத்தின் கீழ் பற்று அட்டை வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக, காசு மீள பெறுகைகளுக்கு வசதியளிப்பதற்காக, லங்காபே வலையமைப்புடன் நாடளாவிய ரீதியில் இணைக்கப்பட்டுள்ள 4,800 இற்கு மேற்பட்ட தன்னியக்கக்கூற்றுப் பொறிகளில் தேசிய அட்டைத் திட்ட அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்படும். 

எம்சிபி வங்கியினால் வெளியிடப்பட்ட முதலாவது லங்காபே - ஜேசிபி கூட்டு அடையாளத்தினைக் கொண்ட பற்று அட்டையானது விற்பனைகளின் பொதுவான மைய ஆளியின் வங்கிகளான கார்கில்ஸ் வங்கி மற்றும் இலங்கை வர்த்தக வங்கி என்பனவற்றினால் கையேற்கப்பட்டமையின் மூலம் நடைமுறைக்கு வந்தது. செலான் வங்கியும் வர்த்தகமல்லா அடிப்படையில் விற்பனைகளின் பொதுவான மையத்தில் இணைந்துகொண்டது. லங்காபே - ஜேசிபி கூட்டு அடையாளத்தினைக் கொண்ட பற்று அட்டைகள் வழங்கப்பட்டுள்ள எம்சிபி வங்கியின் வாடிக்கையாளர்கள் இவ்வங்கிகளினால் தொழிற்படுத்தப்படுகின்ற அனைத்து விற்பனை மைய முனைக்கோடிகளிலும் இவ்வட்டையினை தற்போது பயன்படுத்திக் கொள்ளலாம். 

ழுமுவடிவம்

Published Date: 

Monday, June 24, 2019