இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர். இந்திரஜித் குமாரசுவாமி அவர்களினால் விடுக்கப்பட்ட அறிக்கை

அண்மைய நாட்களில், முன்னாள் நிதியமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க, இலங்கை மத்திய வங்கியின் மூத்த துணை ஆளுநர் முனைவர். நந்தலால் வீரசிங்க அவர்களுக்கெதிராக மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் என்ற முறையில், நான் பணியிலிருந்து வருகின்ற இவ்விரண்டாண்டு காலப்பகுதியில், மிகச் சிறந்த பொருளியலாளரான வீரசிங்க வங்கியின் பணிக்கு வானளாவிய பங்களிப்பினை ஆற்றியிருப்பது பற்றி விதிமுறைசார்ந்த அறிக்கையொன்றினை விடுக்க விரும்புகின்றேன்.

மேலும், முன்னாள் நிதியமைச்சர் மாண்புமிகு ரவி கருணாநாயக்க தமது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்குப் பக்கபலமாக எந்தவொரு சான்றினையும் சமர்ப்பிக்கவில்லை என்பதனைக் குறிப்பிடுவதற்கு நான் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன். 

Published Date: 

Thursday, June 28, 2018