மத்திய வங்கியின் ஆளுநர் வௌியிட்டுள்ள அறிக்கை

மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அர்ஜூன மகேந்திரன் 2016 யூன் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாணயச் சபையின் கூட்டத்தில், 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் திறைசேரி முறிகளின் வழங்கல் தொடர்பான பிரச்சனைகள் பற்;றி அரச தொழில்முயற்சிகள் மீதான பாராளுமன்றக் குழு விடயங்களைக் கண்டறியும் வரை 2016 யூன் 30ஆம் நாள் வியாழக்கிழமை அவரது பதவிக் காலம் முடிவடையும் பொழுது இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்படுவதற்கான கோரிக்கை எதனையும் விடுக்கமாட்டார் என்பதனை அறிவித்திருக்கின்றார்.

Published Date: 

Friday, June 24, 2016