நாணயக் கொள்கைச் சபையானது நேற்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. தற்போது இடம்பெற்றுவரும் மத்திய கிழக்கு மோதல்களிலிருந்து தோற்றம்பெறுகின்ற நிச்சயமற்றதன்மைகளுக்கு குறிப்பான கவனம்செலுத்தி, உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்கள் மீது பரிணமிக்கின்ற அபிவிருத்திகளையும் தோற்றப்பாட்டையும் கவனமாகப் பரிசீலனையிற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது.
Published Date:
Wednesday, March 25, 2026








