Ceylon Tea இன் 150ஆவது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் ஞாபகார்த்த நாணயக் குத்தி

Ceylon Tea இன் 150ஆவது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுவதற்கும் இலங்கையின் முக்கியமானதும்நீண்ட கால ஏற்றுமதி நோக்குடைய பொருளாக தேசிய பொருளாதாரத்திற்கான அதன் பங்களிப்பைஅங்கீகரிக்கின்ற விதத்தில் ரூ.10 முகப்புப் பெறுமதியினைக் கொண்ட ஞாபகார்த்த நாணயக்குத்தியொன்றினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டிருக்கின்றது.

 நாணயக் குத்திகளின் முதலாவது தொகுதி கௌரவ நிதியமைச்சர் திரு. மங்கள சமரவீர அவர்களுக்கும்பெருந்தோட்டத் தொழில்துறையின் கௌரவ அமைச்சர் திரு. நவீன் திஸ்ஸநாயக்க அவர்களுக்கும்இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களினால் 2017.07.12 அன்றுஇலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற வைபவத்தில் வைத்து அலுவல்சார் ரீதியாகக்கையளிக்கப்பட்டது.

 இக்குத்தியானது இன்றிலிருந்து உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளினூடாகச் சுற்றோட்டத்திற்குவெளியிடப்படுவதுடன் சுற்றோட்டத்திலுள்ள ஏனைய நாணயத் தாள்கள் மற்றும் குத்திகளுடன்கொடுப்பனவுகளுக்காகப் பயன்படுத்தலாம்.

 

FULL TEXT

Published Date: 

Wednesday, July 12, 2017