பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வியாபாரத்தினை இடைநிறுத்துதல்

 பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரிஉண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, 2017 யூலை 06ஆம் திகதியன்று இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபை, 2017 யூலை 06ஆம் திகதி பி.ப. 4.30 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில்பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டுநடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்தும் ஆறு மாதகாலப்பகுதிக்கு இடைநிறுத்துவதெனத் தீர்மானித்திருக்கிறது.

 இவ்வொழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கை சந்தையின் மீது இடையூறுகளைக் கொண்டதாக்கமெதனையும் ஏற்படுத்தாதிருப்பதனை உறுதிப்படுத்தும் விதத்தில் மத்திய வங்கி அவசியமானவழிமுறைகளை எடுக்கும். பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட்டின் வாடிக்கையாளர்களினதும் இணைத்தரப்பினர்களினதும் நலவுரித்துக்களை ஒழுங்கானதொரு விதத்தில் கையாள்வதனைவசதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Published Date: 

Thursday, July 6, 2017