அரச பிணையங்களில் செய்யப்பட்ட ஊழியர் சேம நிதியக் கொடுக்கல்வாங்கல்களின் பரீட்சிப்புக்கள் தொடர்பான குறிப்பிட்ட ஊடக அறிக்கைகளை தெளிவுபடுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கை

இலங்கை மத்திய வங்கி, அண்மையில் நடைபெற்ற நாணயச் சபையின் கூட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பிழையான தகவல்களைத் தாங்கி வெளிவந்த குறிப்பிட்ட ஊடக அறிக்கைகள் தொடர்பில் அதன் நிலையினைத் தெளிவுபடுத்த விரும்புகின்றது. 

கண்டறியப்பட்ட விடயங்கள் தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய பொருத்தமான நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும் நோக்குடன், அரச பிணையங்களில் செய்யப்பட்ட ஊழியர் சேம நிதியக் கொடுக்கல்வாங்கல்களின் பரீட்சிப்புக்கள் மீதான அறிக்கை தொடர்பில் நாணயச் சபை கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தது. தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுமிடத்து, இலங்கை மத்திய வங்கியின் உள்ளக நடவடிக்கை முறைமையின் நியதிகளுக்கிணங்க, வங்கியின் எந்தவொரு அலுவலருக்கெதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு நாணயச் சபை தீர்மானித்திருக்கிறது.

Published Date: 

Monday, March 27, 2017