ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான பேராணை விண்ணப்பம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது

மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக திரு.கீர்த்தி தென்னகோன் என்பவரினால் (தென் மாகாண முன்னாள் ஆளுநர்) தாக்கல்செய்யப்பட்ட பேராணை விண்ணப்பம் (CA Writ 417/2021)இ மனுதாரரினால் முதல் நோக்கிலிடு வழக்கொன்றாக தாக்கல்செய்யப்படாத காரணத்தின் அடிப்படையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இன்று நிராகரிக்கப்பட்டது. 

ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக திரு. ஆரியவன்ச திசாநாயக்க என்பவரினால் (முன்னாள் சனாதிபதி வேட்பாளர்) தாக்கல்செய்யப்பட்ட மற்றுமொரு பேராணை விண்ணப்பமும் கடந்த வாரம் மனுதாரரினால் மீளப்பெறப்பட்டது.

Published Date: 

Wednesday, November 3, 2021