மத்திய வங்கிக்கு திறைசேரி உண்டியல்களை வழங்கல்

இலங்கை மத்திய வங்கியானது திறைசேரியின் காசுப்பாய்ச்சலில் 2019 சனவரி மாதத்திற்காக எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டு நாணய நிதியிடல் ஒழுங்கேற்பாடுகள் கிடைப்பதிலுள்ள தாமதத்தின் காரணமாக அரசாங்கத்தின் நிதியளித்தல் தேவைகளுக்கு உதவுவதற்காக திறைசேரியின் கோரிக்கையின் அடிப்படையில் 2019 சனவரியில் ரூ.90 பில்லியன் கொண்ட தொகைக்கான திறைசேரி உண்டியல்களுக்கு நிதியினை வழங்குவதற்கு நாணயச் சபையானது விதிவிலக்கான சூழ்நிலைகளின் கீழ் தேசிய நலன்கருதி திறைசேரியின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டது. 

திறைசேரி உண்டியல்களுக்காக இலங்கை மத்திய வங்கி மூலம் நிதி உதவி வழங்குவதன் காரணமாக ஏற்படும் பேரண்டப் பொருளாதார விளைவுகளை மீளாய்வுசெய்த அரசாங்கமானது கொடுக்கல்வாங்கலின் ஒரு பகுதியினை பெப்புருவரி மாதத்திலும் மீதியினை எதிர்பார்க்கப்பட்ட நிதியியல் ஒழுங்கேற்பாடுகள் கிடைக்கப்பெற்று அரசாங்கத்தின் கடன்படுதல் நிகழ்ச்சித்திட்டம் வழமைக்குத் திரும்பியவுடன் 2019இன் முதலாம் காலாண்டின் போதும் திரும்பி வழங்குவதற்கு இணங்கியுள்ளது. 

Published Date: 

Wednesday, January 16, 2019