அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நிதியியல் உறுதிப்பாடு

நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்றால் என்ன?

பாதகமான அதிர்வுகள் மற்றும் அழுத்தமான நிலைமைகளைக் கொண்ட நிகழ்வுகள் உள்ளடங்கலாக அனைத்து வேலைகளிலும் நிதியியல் இடையேற்பாட்டு நிதியங்கள் இடர்நேர்வு முகாமைத்துவம் மற்றும் கொடுப்பனவுகளை வினைத்திறனுடன் தீர்ப்பனவு செய்தல் போன்ற அதன் முக்கிய தொழிற்பாடுகளை சீராக செயலாற்றுவதற்கான நிதியியல் முறைமையின் இயலுமை என நிதியியல் முறைமை உறுதிப்பாடு வரையறை செய்யப்படலாம். உறுதியான நிதியியல் முறைமையொன்றில் நிதி நிறுவனங்கள் மற்றும் சந்தைகள் மற்றும் கொடுப்பனவுகள் முறைமை செயற்திறன் மிக்கவாறு செயற்படுவதுடன் வங்கித்தொழில், நாணய, கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் நெருக்கடி அங்கு காணப்படாது. 

நிதியியல் முறைமை உறுதிப்பாடு மத்திய வங்கியின் குறிக்கோளொன்றாகப் பேணப்படுவது ஏன்?

உறுதியான நிதியியல் முறைமையானது ஒரு புறத்தில் நாணயக் கொள்கையினை ஆக்கபூர்வமாகக் கடத்துவதற்கும் கொடுப்பனவு முறைமையின் சீரான தொழிற்பாட்டிற்கும் அவசியமாகக் காணப்படுகின்றது. மறுபுறத்தில், நிதியியல் உறுதியின்மையானது உற்பத்தி இழப்புகள், இறைச் செலவுகள் நியதிகளில் உயர்வான தாக்கம் கொண்டதாகக் காணப்படுவதுடன் நிதியியல் முறைமையில் காணப்படும் பொது மக்கள்; நம்பிக்கையினை வலுவிழக்கச் செய்யும். 

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை மத்திய வங்கி எவ்வாறு பேணுகின்றது?

தேவையான சட்ட ரீதியான கட்டமைப்பினை நிறுவுவதன் மூலம் முக்கிய நிதியியல் சந்தையினை ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்தல், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமையினை மேற்பார்வை செய்தல், இறுதிக் கடன் ஈவோனாக செயற்படல், மற்றும் ஒட்டுமொத்த நிதியியல் முறைமையினையும் கண்காணித்தலூடாக மத்திய வங்கி அதன் பொறுப்புடைமையினை நிறைவேற்றுகின்றது.