பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு உதவுவதற்கான நிவாரண வழிமுறைகள்

கடந்தகாலத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட வியாபாரங்களின் நிலைபெறத்தக்க புத்துயிரளித்தலை வசதிப்படுத்தும் நோக்குடன், 2025.03.31 அன்று வரை தொடர்புடைய வங்கிகளுடனான வியாபார புத்துயிரளித்தலுக்கான கலந்துரையாடல்களை தொடங்கியுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் கடன்பாட்டாளர்களுக்கு மேலதிக சலுகைகளை வழங்குமாறு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கும் உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளுக்கும் (இதனகத்துப்பின்னர் உரிமம்பெற்ற வங்கிகள் எனக் குறிப்பீடு செய்யப்படும்)  இலங்கை  மத்திய வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கு உதவுவதற்கான, நிவாரண வழிமுறைகள் மீதான 2024.12.19ஆம் திகதியிடப்பட்ட 2024ஆம் ஆண்டின் 04ஆம் இலக்க சுற்றறிக்கை மற்றும் 2025.01.01ஆம் திகதியிடப்பட்ட 2025ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க பிற்சேர்க்கைச் சுற்றறிக்கை ஆகியவற்றுக்கமைவாக இந்நிவாரண வழிமுறைகள் அமைந்துள்ளன.  

முழுவடிவம்

Published Date: 

Thursday, June 12, 2025