நாணயக் கொள்கைச் சபையானது நேற்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வீதத்தினை 25 அடிப்படைப் புள்ளிகளால் 7.75 சதவீதமாகக் குறைக்கத் தீர்மானித்து, இதன் மூலம் நாணயக் கொள்கையை மேலும் தளர்த்துகின்றது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளைக் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. நாணயக் கொள்கை நிலைப்பாட்டின் அளவிடப்பட்ட இத்தளர்த்தலானது உலகளாவிய நிச்சயமின்மைகள் மற்றும் தற்போதைய குறைவடைந்த பணவீக்க அழுத்தங்கள் என்பவற்றிற்கு மத்தியில் பணவீக்கத்தை 5 சதவீதம் கொண்ட இலக்கினை நோக்கி வழிநடாத்துவதில் ஆதரவளிக்குமென சபை கருதுகின்றது.
Published Date:
Thursday, May 22, 2025