எஸ். ஆர். ஆட்டிக்கல

திரு. ஆட்டிகல 2019.11.19ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் விதத்தில் திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் இவர் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநராகப் பதவி வகித்தார். இவர் இலங்கை மத்திய வங்கியின் உதவி ஆளுநராகவும் பதவி வகித்ததுடன் திறைசேரியின் துணைச் செயலாளராகவும் பணியாற்றுவதற்கு நிதி அமைச்சுக்கு விடுவிக்கப்பட்டிருந்தார். 2018 ஒத்தோபர் 31 தொடக்கம் 2018 திசெம்பர் 18 வரையான காலப்பகுதியின் போது திரு ஆட்டிகல திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். 

திரு. ஆட்டிகல ஐக்கிய இராச்சியத்தின் வோர்விக் பல்கலைக்கழகத்தில் அளவுசார் அபிவிருத்திப் பொருளியலில் விஞ்ஞான முதுமானிப் பட்டத்தினையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞானத்தில் விஞ்ஞானமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

திரு. ஆட்டிகல 2003இல் நிதி அமைச்சுக்கு விடுவிக்கப்படும் வரை இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். நிதி அமைச்சில் அரசிறைக் கொள்கை மற்றும் அரசாங்க தொழில்முயற்சிகள் திணைக்களங்கள் இரண்டிலும் பணிப்பாளர் நாயகம் உள்ளடங்கலாக திரு. ஆட்டிகல பல பதவிகளை வகித்துள்ளார். அரசிறை மற்றும் நாணயக் கொள்கை இரண்டிலும் திரு. ஆட்டிகல அவரது நிபுணத்துவ அறிவினையும் அனுபவத்தினையும் பெற்றுக் கொள்வதற்கு இது அவருக்குத் துணையளித்தது.

திரு. ஆட்டிகல தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராகவும் பணியாற்றியதுடன் இலங்கை வங்கிஇ தேசிய சேமிப்பு வங்கிஇ இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் வரையறுக்கப்பட்ட இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) கம்பனிஇ இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் இலங்கை காப்புறுதிச் சபை உள்ளடங்கலாக பல முக்கிய அரசுக்குரித்தான தொழில் முயற்சிகள் மற்றும் நியதிச்சட்ட சபைகளின் சபைகளில் திறைசேரியினை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.